Saturday 8 September 2018

தஞ்சை மாவட்ட செப்டம்பர் மாத கூட்டம் 
இன்று இரண்டாம் சனிக்கிழமை தஞ்சை  பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர பொதுக்கூட்டம் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் காலையில் சரியாக பத்து முப்பது மணி அளவில் பொதுக் கூட்டம் இனிதே தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தின் சார்பாக அகில இந்திய நமது சங்க மாநாட்டில் 14 தோழர்கள் தஞ்சை மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்ள உள்ளனர் என்றும் மற்றும் மாதாந்திர கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்து அனைவரையும் வரவேற்று உரையை நிறைவேற்றினார்.
தோழர் கே சந்தானகோபாலன, துணைத் தலைவர் தனது உரையில் தற்போதைய நிலையில் எதிர்பார்க்கும் IDA, எம் ஆர் எஸ் with அண்ட் வித் அவுட் தற்போதைய நிலை பற்றியும் பென்ஷன் மாற்றம் தற்போதைய நிலை பற்றியும் தஞ்சை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் பெயரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வாட்ஸாப் குரூப் பற்றியும் விரிவாக விளக்கிக் கூறி தற்போது 50 உறுப்பினர்களுடன் ஆரம்பித்துள்ள குரூப்பில் இன்னும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இணைந்து பயன் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்து அதன்பேரில் இன்றைக்கு 15 புதிய உறுப்பினர்கள் இணைந்து உள்ளனர்  .அதற்கு நன்றி தெரிவித்து உரையினை நிறைவு செய்தார்கள்.
இந்த மாதம் கூட்டத்தின் உணவு செலவிற்காக ரூபாய் 6000 அளித்த தோழர் மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கு நன்றி செலுத்தி உரையாற்றினார். இதில் விசேஷம் என்னவென்றால் தோழர் மீனாட்சி சுந்தரம் இந்த மாத கடைசியில் தான் ஓய்வு பெற இருக்கிறார்கள் இருப்பினும் அவரது அட்வான்ஸ் செயல்களை பாராட்டி நன்றி தெரிவித்தார்
சென்ற மாதம் பணி ஓய்வு பெற்ற பணி ஓய்வு பெற்ற 5 தோழர்களின் மணி விழா மற்றும் இந்த மாதம் பிறந்தநாள் கண்ட தோழர் தோழிகளின் பிறந்தநாள் விழாவும் சந்தன மாலை அணிவித்து கேக் வெட்டி வாழ்த்து கோஷங்களுடன் இனிதாக நடைபெற்றது.

 முடிவில் தோழர் கே சீனு பொருளாளர் நன்றி கூற தஞ்சை சிறப்பு மதிய உணவுடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது

No comments:

Post a Comment