Saturday 11 August 2018

தஞ்சாவூர் மாவட்ட சங்கத்தின் ஆகஸ்ட் மாத 
பொதுக்குழு கூட்டம் 
 11 8 2018  தஞ்சை பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர பொதுக்கூட்டம் தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் இனிதாக நடைபெற்றது.
காலை பத்து முப்பதுக்கு கூட்டம் துவங்கியது. நூற்றுக்கு மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர். தோழர் A. K. தனபாலன் மாவட்ட தலைவர் தலைமை ஏற்க தோழர் V. சாமிநாதன் வழிநடத்தினார். தோழியர் சாரதா சந்தானகோபாலன் அவர்கள் கடவுள் வாழ்த்து பாடினார் .
முதலில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் தோழர் தீன் முகம்மது தோழர் இளவழகன் அவர்களது துணைவியார் பக்கிரிசாமி அவரது துணைவியார்  மறைவையொட்டி அனைத்து தோழர்களும் தோழியர்களும் 2 நிமிடம் மௌனம் காத்து இதயபூர்வமான அஞ்சலி செலுத்தினார்கள். 
பிறகு தோழர்கள் V. சாமிநாதன், என் நடராஜன் ஆகியோர் மறைந்த முதல்வர் கலைஞர் மறைந்த தோழர் தீன் முஹம்மது பற்றிய நினைவலைகளை நினைவுபடுத்தி உரையாற்றினார்கள் .தோழர் பி. எஸ். மூர்த்தி வரவேற்புரை ஆற்ற தோழர் கே. அய்யனார் இணைச்செயலர் சென்ற மாத கூட்டத்தின் அறிக்கையினை சமர்ப்பித்தார். பிறகு உறுப்பினர்களின் குறைகள் தெரிவிக்க மாநிலச் செயலர் தக்க பதில் அளித்து குறைகளை தீர்க்க வழிமுறைகளை அறிவித்தார்.  
மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தஞ்சையைச் சார்ந்த தோழர் பிரான்சிஸ் சேவியர் திருவாரூரை சேர்ந்த தோழர் டி முருகேசன் முறையே மாநில அமைப்புச் செயலர் துணைப் பொருளாளர் அவர்களை வாழ்த்தி வரவேற்று பேசினார் .தோழர் பிரான்சிஸ் சேவியர் நன்றி தெரிவித்து வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டு சிறந்த முறையில் பணியாற்ற உறுதியளித்தார். மாவட்ட செயலர் மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியல் மற்றும் கே ஒய் பி வருகின்ற திங்கட்கிழமை முதல் விவரங்களை தவறாமல் பூர் த்தி செய்து கொடுக்க வேண்டிய அவசியத்தினை பற்றியும் தெரிவித்தார் தோழர் கே சந்தானகோபாலன் உப தலைவர் தனது உரையில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் நடைபெற்ற நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் தொகுத்து வழங்கி அங்கு நடைபெற்ற முக்கிய தலைவர்களின் உரையையும் மாநாட்டில் வரவேற்புரை வழங்கிய மருத்துவர் செந்தில் குமார் நல்லுசாமி அவர்களின் வரவேற்பு உரையையும் இதயம் சம்பந்தமாக தொகுத்து வழங்கிய காணொளி காட்சி உரையையும் பற்றி விளக்கமான செய்திகளையும் தெரிவித்தார். சென்ற மாதம் ஓய்வு பெற்ற மூன்று தோழர்களின் மணிவிழா  மற்றும் இந்த மாதம் பிறந்த தினம் வாய்க்கப்பெற்ற தோழர் தோழியர்களின் பிறந்தநாள் விழாவும் சந்தனமாலை அணிவித்து கேக் வெட்டி வாழ்த்துக்களுடன் இனிதாக நடந்தேறியது. 
ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்ற தோழர் பி சண்முகம் டி ஜி எம் அவர்கள் ரூபாய் பத்தாயிரம் நமது சங்கத்திற்காக நன்கொகுடை வழங்கி அனைவரது இதயபூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டார் தோழர் கே சீனு நன்றி நவில மதிய இனிய விருந்துடன் இனிதே நிறைவுற்றது 
வாழ்க ஏ ஐ பி எஸ் என் எல் ஓய்வூதியர்கள் நலசங்கம் .வளர்க அவர்களது ஒற்றுமை சாதனைகள் பல படைக்க.,
 இப்படிக்கு தோழமை உணர்வுகளுடன்,
 கே. சந்தானகோபாலன்  ,
துணைத்தலைவர் அகில இந்திய BSNL  ஓய்வூதியர்கள் நல சங்கம், 
தஞ்சை மாவட்டம்.

No comments:

Post a Comment