Tuesday 24 July 2018

பென்ஷன் பத்ரிகா ஜூலை மாத தலையங்கம்
               பூரிக்கு பெருமையுடன் செல்வோம்.
BSNL ஓய்வூதியர்களின் மிகப்பெரிய சங்க அமைப்பான நம் AIBSNLPWA  செப்டம்பர் மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் பூரியில் கூட உள்ளது . கடந்த 9 ஆண்டுகளில் நம் செயல்பாடுகள் , அதன் மூலம் நாம் வென்றெடுத்த வெற்றிகள் மேலும் இனி வரும் 3 ஆண்டுகளில் நாம் மேற்கொள்ள வேண்டிய திட்ட செயல்பாடுகளையும் திட்டமிட உள்ளோம். 2009 க்கு முன் நம் BSNL ஓய்வூதியர்கள் சார்பாக குரல் கொடுக்க யாரும் முன் வரவில்லை . நமக்காக அனுதாபம் கொள்ளக்கூட யாருமே இல்லாத ஒரு நிலைமையையும் நாம் நன்கு உணர்கிறோம்.
மத்திய அரசு பொது நிறுவனங்களின் ஊழியர்கள் எவருமே ஓய்வூதிய மாற்றம் செய்யப்படாத நிலை இருக்கும் போது , நாம் மட்டும் நம் ஓய்வூதியர்கள் ஓய்வூதியம்  மாற்றியமைக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை வைத்தபோது , " இது நடக்காது. நிறைவேறாத கனவு இது " என்று பலரும் கூறிய போது , நாம் நம் அயரா முயற்சியின் மூலமாக ஓய்வூதிய மாற்றம் என்ற கனவினை நினைவாக்கி காட்டினோம்.  CCS 1972-வின் விதி முறைகளின் கீழ் நாம் ஓய்வூதியம் பெற்று வருகிறோம்.எனவே நமக்கு ஓய்வூதியம் மத்திய அரசே அளிக்க வேண்டுமென்று நாம் வலியுறுத்திய பொது, " இது விபரீதமான கோரிக்கை. பிறகு பார்த்துக் கொள்ளலாம் " என்றிருந்தார்கள். ஆனால் நாம் நம் கோரிக்கையில் மிகவும் உறுதியாக இருந்து வந்தோம். கடைசியில் மத்திய அரசே நம் கோரிக்கையையை ஏற்றுக்கொண்டது. ஆம் தோழர்களே BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கும் முழு பொறுப்பும் முழுக்க முழுக்க மத்திய அரசையே சாரும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு/ஓய்வூதியர்களுக்கு சம்பள கமிசன் மூலமாக எப்போதெல்லாம் செய்கிறார்களோ அப்போதெல்லாம் BSNL ஓய்வூதிய மாற்றங்கள் செய்யப்பட்ட வேண்டும் என்று ஒரு நிலையான கோரிக்கையினை நாம் வைக்கும்போது, பெரிதாக எண்ணமுடியாத , பெருங்கனவு காண இயலாத சிலர் முரண்பாடான கோரிக்கைகளை வைக்கிறார்கள்.
மத்திய தொழிற்துறை நிறுவனங்களில் பணியில் சேரும்போது,1946 Industrial Employment விதி பிரகாரம் வரையறுக்கப்பட்ட கால வேலை வாய்ப்பினை எல்லா தொழிற்துறைகளிலும் அமலாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதன் முடிவு என்னவாகும் என்றால் , எல்லா வகையான சமூகப்பாதுகாப்பு விதிகளை தொழிலாளிகளிடமிருந்து திரும்பப்பெற்று அவர்களை புதிய ஒப்பந்த ஊழியர்களாக ஆக்குவதுதான். ஆளும் வர்க்கத்திலிருந்து இடையறாத தாக்குதல்களுக்கு இடையில் ஓய்வூதியம்   சிக்கித் தவித்து வருகிறது.
இனிவரும் தலைமுறைக்கு ஓய்வூதியம் என்பது இனி இருக்காது என்பதை நாம் அறிவோம்பென்ஷன் எதிர்காலத்தில் ஒருவேளை கிடைக்கலாம் எனும் நம்பிக்கை கூட யாரும் கொள்ள முடியாது.அவர்களுக்கு சமூக பாதுகாப்பு என்பது அறவே கிடையாது. வேலை இல்லாதோர் எண்ணிக்கை அதிகமாவது , மைனாரிட்டியான உழைக்கும் வர்க்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். .அப்படிப்பட்ட சூழலில் வயது முதிர்ந்த நம் நிலைமை மிகவும் கஷ்டமாக இருக்கும்.வயதானவர்களின் வாழ்வாதாரம் இளைய சமுதாயத்தின்  பொறுப்பில்  இருக்கிறது.
நாம் ஓய்வூதியம் பெறுவதன் மூலம் ஓரளவு நல் வாய்ப்பு அடைந்தவர்களாக இருக்கிறோம். எதுவுமே இல்லாமல் கஷ்டப்படுவோரின் நிலையை எண்ணிப்பார்க்கிறோம். இந்த நிலை மாறி பொதுவான அமைதிகாரமான சுழ்நிலை தவழ நாம் ஆற்ற வேண்டிய கடமை, பொறுப்பு நம் பால் உள்ளது. மீண்டும் நாம் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டும். நாம் மட்டும் தனியாக பயணிக்க முடியாது. சேர்ந்து நடக்கும் போது மேலே மேலே முன்னேறுவோம் என்ற உறுதியை மனதில் ஏந்திசெல்வோம். நாம் திரும்பிப் பார்க்க  தேவையில்லை.
பூரி அனைத்திந்திய மாநாடு மிகப்பெரிய அயிட்டங்களை தனது நிகழ்ச்சி நிரலில் அடக்கியுள்ளது.
வாருங்கள் பூரிக்கு பெருமையுடன் செல்வோம்.


No comments:

Post a Comment