Sunday 29 July 2018

தோழர்களே/தோழியர்களே ,
சரித்திர சாதனைகள் படைத்து வரும் நம் பேரியக்கமாம் AIBSNLPWA ஓய்வூதியர் சங்கத்தின் தமிழ் மாநில மாநாடு வெகு சிறப்பாக தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி மாநகரில் வரும் ஆகஸ்டு திங்கள் 7 மற்றும் 8 தேதிகளில் " வாசவி மஹாலில் " நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறும் மண்டபத்தினை சென்றடையும் வழிகளை இப்போது பார்க்கலாம்.
நம் மாநாடு நடைபெறும் வாசவி மஹால் திருச்சிராப்பள்ளி சந்திப்பு ரயில் நிலையத்திற்கும் , திருச்சிராப்பள்ளி மத்திய பேரூந்து நிலையத்திற்கும் மிக அருகாமையில் , சில நிமிட நடை பயண தூரத்தில் அமைந்துள்ளது.
ரயிலில் மாநாட்டிற்கு வருவோர் , ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும் வழியில் ஒரு அழகிய ரவுண்டானா உள்ளது. அந்த இடத்தில் வலது புறம் திரும்பி சில அடி தூரம் நடந்தால் வாசவி மஹாலை அடையலாம்.
பேரூந்து மூலமாக திருச்சி வருபவர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் இறங்கி ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) செல்லும் எண் 1 டவுன் பஸ்ஸில் ஏறி
( நிறைய பஸ்கள் உண்டு ) RC School  எனும் STOP ல் இறங்கி வரவும். அல்லது மத்திய பேரூந்து நிலையத்தில் இறங்கி ஆனந்த நடை பயணமாக கலையரங்கம் வழியாக வந்து வாசவி மஹாலை அடையாலாம் . 
உங்கள் பயணம் இன்பமயமாக அமைய வாழ்த்துக்கள் .
வணக்கம் 
மாநாட்டு குழுவினர்.
                                                                                                                                      Reception Committee Chairman



No comments:

Post a Comment