Saturday 10 March 2018

            ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நடப்பதுபோல இம்மாதத்தில் மகளிர் தின விழாவையும் இணைத்து கூட்டம்   10-03-2018 அன்று நடந்தது. திரு.M.V.ராமகிருஷ்ணன் தலைவர்  தலைமை தாங்கினார்.  80   பேர்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இம்மாதத்தில்  திரு.M. ரவனையா,TT  திரு.V. கமல்ராஜ்,TT திரு.S. செல்வராஜூ,DET(Rtd), திரு.A. வீரமுத்து, LI  ஆகிய  4 பேர் நமது சங்கத்தில் ஆயுள்சந்தா  உறுப்பினராக இணைந்தனர். அவர்களுக்கு கைத்தறித்துண்டு அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.  இவரையும்  சேர்த்து தற்போது  ஆயுள்சந்தா  உறுப்பினர் எண்ணிக்கை  240 ஆனது. ஆண்டுசந்தா உறுப்பினர்  இல்லைபுதுச்சேரியில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட முதன்மைச் சங்கமாக நமது சங்கம் உள்ளது என செயலர் அறிவித்தவுடன் அவை கைதட்டி பாராட்டியது. ஆயுள்சந்தா செலுத்திய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
     கூட்டத்தில் மாவட்ட மாநாட்டினையும், தமிழ்மாநில செயற்குழுவையும் சேர்த்து  ஏப்ரல் 10 & 11 தேதிகளில் நடத்திட ஆயத்த வேலைகளை செய்ய குழுக்கள் அமைக்கப்பட்ட்டட்து. உணவுக்குழு, மேடை அலங்காரக் குழு, உறைவிடம் செல்ல வழிகாட்டும் குழு அமைக்கப்பட்டது. ஏப்ரல்-10-ந்தேதி காலை 9 மணி முதல் மதியம் 2. வரை மாவட்ட மாநாட்டை நடத்துவது என்றும், மாநாட்டை சிறப்பிக்கும் பொருட்டு தலைவர்கள் திரு,V.ராமராவ்,மாநிலத் தலைவர், திரு.K முத்தியாலு, மாநிலச் செயலர். திரு.S.அருணாச்சலம், அகில இந்திய துணைப் பொதுச்செயலர், திரு. ஜெயவேலு ஜெயகுமார், பொதுமேலாளர், BSNL, புதுச்சேரி ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.  மதியம் 02 மணி முதல் இரவு 7 மணி வரையும் மறுநாள் 11-04-2018 அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையும் மாநிலச்செயற்குழுவும் புதுச்சேரி, சின்னக்கடை, லப்போர்த் வீதி (காந்தி வீதி குறுக்கு) அமைந்துள்ள PMSS மகாலில் நடைபெற உள்ளது. தலைவர்கள் திரு.G. நடராஜன், பொதுச்செயலர், திரு.D. கோபாலகிருஷ்ணன், ..உதவி தலைவர் ஆகியோர் சிறப்புறையாற்றுகின்றனர். மாநாடு சிறக்க அனைவரும் ஒத்துழைக்க செயலர் வேண்டுகோள் விடுத்தார்.   கூட்டத்தில் கலந்துகொண்ட மகளிர் தோழியர்கள் திருமதி.  பானுமதி, கெளரி, கல்யாணி, ஏகவள்ளி, அமுதா, முனியம்மாள்,, அமரஜோதி ஆகியோர் சால்வை அணிவித்து கெளரவப்படுத்தப்பட்டனர்தலைவர் தோழர் ராமகிருஷ்ணன், தனது பிறந்த நாளை முன்னிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.       உறுப்பினரின் பிறந்த தேதியன்று காலையில் அவர்களுக்கு சங்க சார்பாக பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் முறையை கடைப்பிடித்து பிப்ரவரி-2018 மாதத்தில் 11 தோழர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில்  கலந்துகொண்ட உறுப்பினர்களில் திரு. N பட்டாபி, S..சதாசிவம், மாநில உதவி பொருளாளர், திரு.வைத்திலிங்கன், சாம்பசிவம், கிருஷ்ணசாமி, C..ஜானகிராமன், திரு. அசோகராஜன் ஆகியோர் தங்கள் கருத்துக்களை பதிவுச் செய்தனர். பொருளாளர் லோகநாதன் நன்றி கூறினார்.






No comments:

Post a Comment