Wednesday 27 December 2017


தருமபுரி மாவட்ட AIBSNLPWA  சங்கம்  27-12-2017 அன்று ஓய்வூதியர் தினத்தினை கிருஷ்ணகிரியில் உள்ள சுபம் ஹாலில் காலை 1030 மணிக்கு மிக சிறப்பான முறையில் கொண்டாடியது. தருமபுரி மாவட்ட தலைவர் தோழர் C .முனியன் தலைமை தாங்கினார். கிளை செயலர்கள் தோழர் தங்கவேலு கிருஷ்ணகிரி, S.P. சத்யேந்திரன் ஓசூர் , S .அசோகன் தருமபுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலர் தோழர் R .சுப்ரமணியன் வரவேற்பு உரை நிகழ்த்தினார்., கிருஷ்ணகிரி கிளை பொறுப்பாளர் தோழர் தனபால் துரைசிங் அஞ்சலி உரை நிகழ்த்த சமீபத்தில் மறைந்த தோழர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் தோழர். R . துரை , NPTA மாவட்ட தலைவர் தோழர் C . மோகன் ராவ் , அகில இந்திய ரேடியோ சங்க மாவட்ட தலைவர் தோழர் K .சிவப்பிரகாசம் , அஞ்சல் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் தோழர்.A .R . கோபாலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .
தமிழ் மாநில துணைத்தலைவர்     தோழர் வேதியப்பன்   தன் உரையில் ஓய்வூதியம் வந்த வரலாறு, நகாரா அவர்கள் தொடுத்த வழக்கின் தீர்ப்பு 17-12-1982 அன்று வழங்கப்பட்ட விபரங்கள், அதன் மூலம் நாம் பெற்றுள்ள சலுகைகள் ஆகியவற்றை மிக அருமையாக பட்டியலிட்டு பேசினார்.
தமிழ்மாநில துணை செயலர் தோழர் R .வெங்கடாசலம் நீண்ட உரையாற்றினார். BSNL பொதுத்துறை யாக மாறிய பின்பும் ஓய்வூதிய மாற்றங்களை நம் சங்க முயற்சியால் பெற்றது, 78.2 சதம் IDA நிலுவைத்தொகை பெற்று தந்தது நம் சங்கம் தான். மருத்துவ அலவன்ஸ் பெற்றது, extra increment  சிக்கலில் கோர்ட் க்கு செல்ல இருப்பது, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை BSNL ஓய்வூதியர்களுக்கும் வழங்கிட நம் சங்கம் அயராது பாடுபட்டு வருகிறது என்று விரிவாக, தெளிவாக எடுத்துரைத்தார்.
70 வயது நிரம்பிய 26 ஓய்வூதியர்களு க்கு   கூட்டத்தில் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர் 
தருமபுரி மாவட்ட சங்கத்தில் 140 தோழர்கள் உள்ளனர். இதில் அனைவருமே ஆயுள் உறுப்பினர்கள் எனும் சிறப்பினை கொண்டது இம்மாவட்டம்.
இன்றைய கூட்டத்தில் 70 தோழர்களுக்கு மேலாக கலந்து கொண்டு சிறப்பித்தனர் 
மாவட்ட பொருளாளர் தோழர் வணங்காமுடி நன்றி கூற , கூட்டம் முடிவடைந்தது.  கூட்டம் முடிவடைந்தபின் அனைவருக்கும் சுவைமிகு மதிய உணவு வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment