Sunday 18 December 2016

17-12-2016 அன்று காலை 11-00 மணியளவில் தஞ்சாவூர் மெயின் தொலைபேசி  வளாகத்தில் ஓய்வூதியர் தினம் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
 மாவட்ட தலைவர் தோழர் A.K. .தனபாலன் தலைமை தாங்கினார்.
நம் சங்கத்தின் வண்ணமிகுகொடியினை உயர்ந்த கம்பத்தில் தோழர் K.S. கிருஷ்ணமூர்த்தி  தமிழ் மாநில அமைப்பு செயலர் ஏற்றி வைத்தார் .
தோழர் C.Vதங்கையன்ஓய்வூதியர் தின சிறப்புகளை எடுத்துக்கூறி நீண்டதொரு உரையாற்றினார் .
தோழர் V .சுவாமிநாதன் மாவட்ட செயலர் , சங்க செய்திகளை 78.2% IDA நிலுவைத்தொகைக்கான செயல்பாடுகளை இனி நாம்  எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மிக அருமையானதொரு உரையாற்றினார் .
தோழர் அய்யனார் நன்றி உரை வழங்க விழா இனிதே முடிவுற்றது .
சுமார் 75 ஓய்வூதியர்கள் உணர்ச்சிகரமாக கலந்து கொண்டு சிறப்பித்தது போற்றத்தக்கது.
விழா முடிவினில் இனிப்புகள் அனைவருக்கும் ,அலுவலக  ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது.

5 comments: