Friday 30 November 2018

22-11-2018 அன்று நமது உண்ணாவிரத போராட்டம் முடிந்த பிறகு தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாவட்ட மாநில சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்ததற்கு இணங்க மாவட்ட சங்கங்கள் நன்கொடை அனுப்பியுள்ளன .மாவட்ட செயலர்கள் கொடுத்துள்ள தகவல் பிரகாரம் 6 லட்சத்திற்கு மேல் பணம் கொடுக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்கள் .  இதுவரை சென்னை தொலைபேசி மாநிலம் - ரூ 1 லட்சம் , சேலம் மேற்கு - ரூ 1 லட்சம் , வேலூர் - ரூ 50 ஆயிரம் , கோவை - ரூ 20 ஆயிரம், தூத்துக்குடி - ரூ 20 ஆயிரம், சேலம் கிழக்கு -ரூ 10 ஆயிரம் , கடலூர்  ரூ 25 ஆயிரம், காரைக்குடி - ரூ 20 ஆயிரம், மதுரை - ரூ 25 ஆயிரம், மத்திய சங்கம் - ரூ 20 ஆயிரம், தமிழ் மாநிலம் - ரூ 50 ஆயிரம் என பணம் அனுப்பியுள்ள. 
தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சுமார் 400 குடும்பங்களுக்கு தலா 2 புடவைகள், 2 உள்ளாடைகள் , 2 லுங்கிகள் ,2 போர்வைகள், 2 துண்டுகள், பாய் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்து பணமும் கொடுக்கப்பட்டு விட்டது. மேலும் தேவைப்படுகிற உணவுப்பொருட்கள், மெழுகு வத்தி, தீப்பெட்டிகள் ஆகியவைகளும் வாங்கி எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் ஓரிரு நாட்களில் பட்டுக்கோட்டையில் உள்ள தோழர் சிவ சிதம்பரம் அவர்களிடம் அனுப்பி வைக்கப்படுகிறது.
டிசம்பர் மாதம் 3 அல்லது 4 தேதிகளில் தஞ்சை மாவட்ட தோழர்களுடன் தமிழ் மாநில தலைவர் , மாநில செயலர், மாநில பொருளாளர், மத்திய சங்க துணை பொது செயலர் , சென்னை தொலைபேசி மாநில நிர்வாகிகள் குழு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
STR  சென்னை ரூ - ஒரு லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளது பாராட்டுதலுக்குரியது. நிவாரண நன்கொடை பெற விரைந்து நடவடிக்கைகள் எடுத்துள்ள அனைத்து மாவட்டங்களுக்கு பாராட்டுக்கள் .
தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர்வி ,
தமிழ்மாநில செயலர்.



No comments:

Post a Comment