Sunday 8 January 2023

 

04-01-2023  தஞ்சை மாவட்ட மாநாட்டில் உணவு இடைவேளைக்குப் பிறகு 3 மணி அளவில் அமைப்பு நிலை விவாதம் நடைபெற்றது. தோழர் என். வீரபாண்டியன் மாநிலத் துணைச் செயலாளர் பட்டுக்கோட்டை அவர்கள் துவக்க உரையாற்றினார்கள். அவர் தனது உரையில் ஓய்வூதிய மாற்றம் எவ்வாறு பெற வேண்டும் அதில் உள்ள குறை நிறைகளை நிவர்த்தி செய்து முறையான முறையில் ஓய்வூதிய மாற்றம் பெறவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசினார். அடுத்து ஆண்டறிக்கை நிதிநிலை அறிக்கை ஆகியவை பொதுக்குழுவால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வருகின்ற 2023 2024 ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் ஏகமனதாக பொதுக்குழுவினனாரால் அங்கீகரிக்கப்பட்டனர். புதிய நிர்வாக குழுவில்

தோழர் கே. சந்தான கோபாலன் முதன்மை ஆலோசகராகவும்
தோழியர் எஸ் சந்திரகுமாரி மாவட்ட தலைவராகவும்
 தோழர் கே. அய்யனார் மாவட்ட செயலாளராகவும்
தோழர் கே. சீனு மாவட்ட பொருளாளராகவும்  
 தேர்வு செய்யப்பட்டனர்.

இது தவிரவும் 50க்கும் மேற்பட்ட புதிய நிர்வாகிகள் ஒரு மனதாக பல்வேறு பதவிகளுக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாக குழு பழைய நிர்வாக குழு விடமிருந்து பொறுப்புகளை ஏற்றுக் கொண்டது. புதிய குழுவிற்கு வாழ்த்துதல்களும் முன்றைய குழுவிற்கு பாராட்டுதல்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

திருமதி சந்திரகுமாரி தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சபை நடவடிக்கைகளை நடத்திட தொடர்ந்து மாவட்ட செயலாளர் . அய்யனார் சபை நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.அடுத்து கிளைச் செயலர்கள் டி. ராஜேந்திரன் திருவாரூர் AMF ஜெயசீலன் கிளைச் செயலாளர் பட்டுக்கோட்டை தோழர் ராஜாஜி கிளை தலைவர் திருவாரூர் எம். இருதயராஜ் செயல் தலைவர் தஞ்சை தோழர் சந்தான கோபாலன் முதன்மை ஆலோசகர் தஞ்சை தோழியர் எம். பத்மினி அமைப்பு செயலாளர் தஞ்சாவூர் தோழி மல்லிகா சுகுமாரன் மகளிர் ஒருங்கிணைப்பு குழு ஆகியோர் உரையாற்றினர். தஞ்சை மாவட்ட சங்க சிறந்த செயல்பாட்டுக்கு காரணமாக விளங்கிய அனைத்து தோழர்களும் தோழியர்களும் பொன்னாடை போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். நிறைவாக தோழர் . அய்யனார் மாவட்ட செயலர் நன்றி நவில மாவட்ட அமைப்பு நிலை கூட்டம் நிறைவு பெற்றது.

நிகழ்வுகளின் தொகுப்பு
கே சந்தான கோபாலன்
முதன்மை ஆலோசகர் 
 AIBSNLPWA THANJAI.










No comments:

Post a Comment