Sunday 14 February 2021

 

AIBSNLPWA கடலுார் பகுதி மாதாந்திர இரண்டாம் சனிக்கிழமை கூட்டம் தோழர்.சாந்தகுமார். தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
கோரானா தொற்று காரணமாக 2020 மார்ச் மாத கூட்டத்திற்கு பிறகு
நடத்தப்பட்ட இந்த வருடத்தின் முதல் கூட்டம் இது. 25 தோழியர்கள் உள்பட 100 தோழர்கள் கலந்து கொண்டனர். மேலும் தலைவர் சாந்தகுமார் அவர்களின் 67. வது பிறந்தநாளையொட்டி Birthday cake  வெட்டி தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவருக்கு அனைத்து தோழர்களும் தெரிவித்துக் கொண்டனர்.
 
கூட்டத்தில் பகுதி செயலர் தோழர்.G.அசோகன் கடந்த கூட்டத்திற்கும் இன்றைய கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்த நம் சங்கம் குறித்த அனைத்து தகவல்களையும் கூறினார்  மாவட்ட தலைவர் ழர்.P.ஜெயராமன்,
மாநில துணை தலைவர் தோழர்.K. சந்திரமோகன் சிறப்புரை ஆற்றினார்கள் நம் சங்க அலுவலகத்திலேயே life certificate, GCHS, ID CARD, MEDICAL CARD
உறுப்பினர்களுக்கு பெற்று தருவதற்கான அத்துணை பணிகளையும் மிக சிறப்பாக செய்து வருகின்ற தோழர்கள் .மகேஷ், N.நாகராஜன்,D.ராஜேந்திரன்.KCM மற்றும் நந்தகுமார் ஆகியோரை பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். Smt.சுந்தரி (Rtd CAO) செல்வர்சு மேரி V.விஜயலட்சுமி, k.சீனிவாசன் ஆகியோரும் நம் அனைத்து தலைவர்களும் நம் ஓய்வூதியர் நலம் காத்திட ஆற்றிடும் பணிகள் குறித்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து உரையாற்றினர்.
சாலை விபத்தில் உயிர் நீத்த JTO  தோழர். சட்சிதானந்தத்தின்
மனைவிக்கு நம் சங்க உறுப்பினர்கள் வழங்கிய நன்கொடை
தொகை ரூ.20000/ நம் சங்க சார்பில் அவருடைய மனைவி நர்மதா விடம் வழங்கப்படுகிறது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இது நம் சங்கத் தோழியர்கள் ராஜம் (Sde) சென்னை, ராஜம் JTO சென்னை  விஜயலட்சுமி அவர்களும் தோழியர் நர்மதா விற்கு நேரடியாக நன்கொடை தொகையை அனுப்பியுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில் தோழர். P.சிவகுமாரன் , தோழர் .K இளங்கோ அவர்களும் உரை ஆற்றினார்.
இன்றைய கூட்ட செலவுகள் அனைத்தையும் தலைவர் சாந்தகுமார் அவர்களே ஏற்று செய்துக் கொடுத்தார் இறுதியாக பொரு லாளர்.தோழர் N.S  நன்றி உரை கூறிட கூட்டம் இனிதே முடிவடைந்தது. இந்த செய்தியை மாநில web site யில் வெளியிடும் படி அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.நன்றி .

No comments:

Post a Comment