Monday 16 October 2023

 

15- 10 -2023 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை அகில இந்திய BSNL  ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர கூட்டமும் ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையுடன் ஓய்வூதிய மாற்றத்திற்கான நீதிமன்ற தீர்ப்பின் வெற்றி விழாவும் ஒன்று சேர்ந்து தஞ்சை மேரிஸ் கார்னர் மெயின் தொலைபேசி வளாகத்தில் காலை  பத்து முப்பது மணிக்கு விழா நிகழ்ச்சிகள் செயல் தலைவர் எம் இருதயராஜ் தலைமையில் தோழர் வீ. சாமிநாதன் மாநில தலைவர் முன்னிலையில் தோழர் அய்யனார் மாவட்ட செயலர் சிறப்பான முறையில் கூட்டத்தினை நடத்தினார். இன்றைய கூட்டத்தில் 125க்கும் மேற்பட்ட தோழர் தோழியர்களும் பங்கு கொண்டு சிறப்பித்தனர்.

மாநிலத் தலைவர் தனது சிறப்பு உரையில் நமது சங்கம் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை பெற்று தந்துள்ள ஓய்வூதிய மாற்றம் மற்றும் 78.2ல் பெறுவதற்காக நாம் நடத்திய போராட்டங்கள் மற்றும் தற்போதைய ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி நீதிமன்ற தீர்ப்பு பற்றி ஒரு முழுமையான அங்கத்தினர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து உரையாற்றி அமர்ந்தார். நிகழ்வின் முடிவாக தோழர் சண்முகம் மாவட்ட துணை செயலாளர் நன்றி உரையாற்றிட மதிய தஞ்சை பாரம்பரிய இன்சுவை உணவுடன் விழா இனிதே நிறைவுற்றது.

இன்றைய கூட்டத்தின் முழு செலவையும் தோழியர் லைலா பானு ரூபாய் 15,000 அளித்து தனது மணிவிழா நிகழ்வை மிக்க மகிழ்ச்சியுடன் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு கொண்டாடி மகிழ்ந்தார். நன்றி.

கூட்டத்தின் தொகுப்பு
கே .சந்தான கோபாலன் மாவட்ட முதன்மை ஆலோசகர் தஞ்சாவூர்.







No comments:

Post a Comment