Sunday 15 May 2022

தோழர்களே ,

தூத்துக்குடி மாவட்ட மாநாடு 30-04-2022 அன்று ஜெயஸ்ரீ கல்யாண மண்டபம் தூத்துக்குடியில் காலை 10-00 மணிக்கு மாவட்ட தலைவர் L .தாமஸ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தேசியக்கொடியை மூத்த தோழர் A .மாடசாமி அவர்களும் , சங்கத் கொடியை தோழர் K .முத்தியாலு அ .இ.துணை பொதுச் செயலர்  அவர்களும் சங்க கோஷங்கள் விண்ணதிர ஏற்றினார்கள். 

வரவேற்புரையை மாவட்ட பொருளாளர்  தோழர் S .பால்சாமி அவர்கள் ஆற்றினார்கள் .துவக்க பேருரையை மாவட்ட இணை செயலர் தோழர் பர்னபாஸ்  அவர்கள் ஆற்றினார். தோழர்கள் இசக்கியப்பன் , செல்லத்துரை , மாடசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்க , தோழர்.K .முத்தியாலு அ .இ.து.பொது செயலர் , தோழர் R .வெங்கடாசலம் தமிஸ்மாநில செயலர் , தோழர் N .அம்பிகாபதி தமிழ் மாநில உதவி செயலர் ஆகியோர் நீண்டதொரு உரை நிகழ்த்தினார்கள்.

விழாவில் 70 வயது , 80 வயது பூர்த்தியான தோழர்கள் / தோழியர்கள் கௌரவிக்கப்பட்டார்கள் .சுவைமிகு மத்திய உணவு க்குப்பின் பொருளாய்வு குழு மதியம் 2-00 மணிக்கு கூடியது. ஆண்டறிக்கை , நிதி நிலை அறிக்கை மற்றும் சேமநிலை அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு அவை அவையோரால் அங்கிகரிக்கப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் பட்டியல் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

தோழர் கணேசன் ஆடிட்டர் நன்றியுரை வழங்கினார் . மாநாடு மாலை இனிதே முடிவுற்றது.











No comments:

Post a Comment