Thursday 26 September 2019


தென்காசி கிளையின்  பொதுக்குழு கூட்டம்
தென்காசி மாவட்டம் தென்காசி கிளையின்  பொதுக்குழு கூட்டம்
24 .- 9 - 19  அன்று காலை 10 மணிக்கு தலைவர் திரு .V .பரமசிவன் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற்றது .தோழர் திரு .துரைராஜ் இறைவணக்கம் பாடினார் .கிளை செயலர் தோழர் S .செல்லப்பா வரவேற்புரை நிகழ்த்தினார் . பொருளாளர் தோழர் N . வேலாயுதம் வரவு செலவு ஆண்டறிக்கை சமர்ப்பித்து ஒப்புதல் வாங்கினார் .. பொதுக்குழு வரவு செலவு கணக்கு அறிக்கைக்கு ஒப்புதல் செய்தது . செயலர் கிளையின் அமைப்பு நிலைகளை விளக்கி பேசினார் .கிளையின் வளர்ச்சிக்கு அனைத்து உறுப்பினர்களும் உறுதுணையாக இருக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டார் கீழ்கண்ட தீர்மானங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் ஏகமனதாக நிறைவேறற்றப்பட்டது.
1 தென்காசி புதிய மாவட்டமாக மாறியதால்  AIBSNLPWA  தென்காசி கிளையைஉடனடியாக   தென்காசி மாவட்ட கிளையாக மாற்றிட வேண்டும்.
2. மதுரையில் 11-2-2015 அன்று   நடந்த சமாதான கூட்டத்தில் ஒப்புக்கொண்ட படி, உடனடியாகதென்காசி கிளையிலிருந்து இதுநாள்வரை திருநெல்வேலி கிளையில் இருக்கும் தென்காசி பகுதியை சேர்ந்த ஓய்வூதியர்களை கண்டிப்பாக தென்காசி கிளையில் சேரும்படி செய்யவேண்டும்.
3. தென்காசி பகுதியிலிருந்து புதிதாக பென்ஷனர்களை திருநெல்வேலி கிளையில் சேர்க்கக்கூடாது. இதுவரை புதிதாக சேர்ந்தவர்களுக்கான தென்காசிகிளைக்கான கோட்டா(பகுதி பணம் ) இதுவரை தரவில்லை அதனை உடனடியாக தரவேண்டும்.
4. தூத்துக்குடியில் நடக்கவிருக்கும் மாநில செயற்குழுவில் தென்காசி பகுதி நிர்வாகிகளை கலந்து கொள்ள அனுமதிக்கவேண்டும்.
5. தென்காசி கிளையில் புதிதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கான திருநெல்வேலி கிளைக்கான பகுதி பணம் அனுப்ப வேண்டாம்..
இவை தவிர பொது பிரச்சனைகளும் தீர்மானிக்கப்பட்டு,அது சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கு  கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன. பொதுக்குழுவில் தென்காசி ,மேலகரம் ,செங்கோட்டை  ,கடையநல்லூர் ,புளியங்குடி ,வாசுதேவநல்லூர் ,சிவகிரி ,கடையம்,பாவூர்ச்சத்திரம்,சுரண்டை பகுதியிலிருந்து திரளான ஓய்வூதியர்கள்  கலந்து கொண்டார்கள்.
                                                                        
 இப்படிக்கு ,
 ( S .செல்லப்பா,  )
 செயலாளர் AIBSNL PWA ,
தென்காசி -627811



No comments:

Post a Comment