Wednesday 18 April 2018


6வது  தமிழ் மாநில மாநாடு திருச்சி நகரில் 2018 ஆகஸ்ட் திங்கள்  7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற இருக்கிறது. சுமார் 500 க்கும் மேற்பட்ட ஓய்வூதிய சார்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கும் இம்மாநாடு திருச்சி ஜங்சன் மற்றும் மத்திய பேருந்து நிலையத்திற்கு  அருகில் உள்ள வாசவி மஹாலில் நடைபெற உள்ளது. மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற முழுப்பணமும் செலுத்தி உறுதி செய்யப்பட்டு விட்டது.மேலும் வாசவி மஹாலுக்கு அருகிலேயே சார்பாளர்களும் வசதியாக தங்குவதற்காக இடமும் தேர்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டு விட்டது
மாநாடு சிறப்புற நடைபெற எல்லா ஏற்பாடுகளையும் வரவேற்புக்குழு செய்து வருகிறது. வரவேற்புக்குழு தலைவராக இருந்து செயல்பட திருச்சியின் பிரபல இருதய நோய் மருத்துவர் டாக்டர் N .செந்தில்குமார் அவர்கள் அன்புடன் இசைந்துள்ளார். திருச்சி மாவட்ட தலைவர் தோழர் V.P. .காத்தப்பெருமாள் செயல் தலைவராக  , மாவட்ட செயலாளர் தோழர் T .செல்வராஜ் மாநாட்டு செயலாளராக , மாவட்ட பொருளாளர் தோழர்R .சுதர்சனம் மாநாட்டுப் பொருளாளராகவும் செயல் படுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி என்றாலே திருப்பு முனை என்ற பொருளுக்கு ஏற்ப , நமது இந்த மாநாடும் ஓய்வூதியர்கள் முன்னேற்றத்தில் திருப்பு முனையாக அமையும் என்ற நம்பிக்கையோடு கூடுவோம்.
மாநாட்டுப்பணிகளை மாநில துணைசசெயலர் தோழர் R.V  அவர்கள் திருச்சி மாவட்ட தோழர்களுடன் ஒருங்கிணைந்து வழிகாட்டி வருகிறார்
Dr.N.Senthil Kumar Nallusamy,MD, DNB(MED),
DNB(CARDIO), MNAMS FACC (USA).,
President, Reception Committee
6th TN Circle Conference,
Tiruchirapalli.



No comments:

Post a Comment