Monday 28 March 2022

 

26/3/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று AIBSNLPWA சங்கத்தின் விருதாச்சலம் பகுதியின் மூன்றாவது ஆண்டு விழா விருத்தாச்சலத்தில் மக்கள் மன்றம், பாத்திமா சர்ச்சில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மூத்த தோழர் P வேலாயுதம் அவர்கள் முன்னிலை வகிக்க, தோழர் M ஞானசேகரன் அவர்கள் தலைமை தாங்கி தலைமை உரை ஆற்றினார். பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் M ராஜலிங்கம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டசங்க நிர்வாகி தோழர் R  ராமலிங்கம் அவர்கள் துவக்க உரையாற்றினார். தோழர் சித்தி ராஜ் மாவட்ட செயலாளர் AIBSNLPWA திருச்சி, தமிழ்நாடு அரசு அனைத்து ஓய்வூதியர்களின் சங்கம் சார்பாக தோழர்T கேசவன் மாவட்ட செயலாளர், தோழர் G வீராசாமி மாவட்ட தலைவர் ஆகியவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

பின்னர் மாநிலச் செயலாளர் தோழர்  R வெங்கடாசலம் அவர்கள் தமிழ் மாநில சங்கம் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஆற்றிய சீரிய பணிகள் பற்றியும் மற்றும் டில்லியில் முகாமிட்டிருந்த மத்திய சங்க நிர்வாகிகள் ஆற்றிவரும் பணிகள் பற்றியும், Pension anomaly,extra increment ஆகிய வழக்குகளில் நமது மத்திய சங்கம் பெற்ற வெற்றிகளை பற்றியும், ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின்படி ஓய்வு ஊதிய மாற்றத்தை நிச்சயம் பெற்று தரும் என்பதனையும் இன்னும் பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் உரையாற்றினார்.

இடைவேளைக்கு பிறகு தோழர்கள் P ஜெயராமன் மாவட்ட தலைவர்,R அசோகன் மாவட்ட செயலாளர், மாவட்ட சங்க நிர்வாகிகள்  வாழ்த்துரை வழங்கினார்கள்.. தோழர்கள் M ஞானசேகரன், R ராமலிங்கம்,P நாராயணசாமி ஆகியோர்கள் முறையே பகுதி தலைவர், ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக தோழர் D  மோகன்ராஜ் அவர்கள் நன்றியுரை ஆற்ற விழா இனிதே முடிந்தது.


No comments:

Post a Comment