Sunday 6 March 2022

 


06/03/2022 அன்று விழுப்புரம் பகுதியின் மாதாந்திர கூட்டம் மற்றும் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டமும் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர்  CTS மணி அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் S  செல்வம் அவர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாடினார். தோழர் V பெருமாள் அஞ்சலி உரை ஆற்றினார். தோழர் G கணேசன் , விழுப்புரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் வரவேற்புரை ஆற்றினார்.

பின்னர் உலக மகளிர் தினத்தை ஒட்டி தோழியர்களுக்கு ரோஜா மலர் கொத்து வழங்கப்பட்டது. தோழியர்கள் செல்வரசு மேரி ,ராணி, மணிமேகலை ஆகியவர்கள் உலக மகளிர் தினத்தை பற்றி உரையாற்றினார்கள். தோழர்கள் D. ராஜேந்திரன்,K வீரராகவன், R செல்வம் ஆகியோர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்

மாவட்ட தலைவர் தோழர் P ஜெயராமன் மாவட்ட செயலாளர் R அசோகன் ஆகியோர்கள் பெண்கள் நாட்டின் பல நிலைகளில் பங்கேற்று நாட்டின் வளர்ச்சிக்கும் குடும்பத்திற்கு ஆற்றிவரும் பணியினை நினைவு கூர்ந்தனர். சமீபத்தில் நமது சங்கம் நீதிமன்ற போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்ற இரண்டு வழக்குகள் பற்றியும் மற்றும் பென்ஷன் ரிவிஷன் பற்றியும் குடும்ப ஓய்வூதியர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல தகவல்களையும் உறுப்பினர்களிடையே பரிமாறிக்கொண்டனர்

இறுதியாக விழுப்புரம் பகுதி பொருளாளர் தோழர் பாஸ்கர் நன்றி உரையாற்றினார்.









No comments:

Post a Comment