Sunday 13 March 2022

 

நேற்று (12-03-2022) ஆலந்தூர் காமராஜ் திருமண மண்டபத்தில் தோழர் சம்பத்குமார் அவர்கள் தலைமையில் முப்பெரும் விழா மிக சிறப்பாக நடைபெற்றது .

ஆண்டறிக்கை வரவு செலவு கணக்குக்குப் பிறகு தோழியர் v.ரத்னா அகில இந்திய உதவிச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் Matron ஜானகிஅவர்களும் திருமதி பிரவீனா சாலமன் அவர்களும் கௌரவிக்கப்பட்டது  -சமூக அக்கறையுடன் செயல்படும் தந்தி மாவட்டம் மிகவும்  பாராட்டுக்குரியது.

80 வயது பூர்த்தி செய்யும் தோழர் V. ராமாராவுக்கு அகில இந்திய உதவித் தலைவர் தோழர் DGயின் தலைமையில் நடைபெற்ற  பாராட்டு விழாவில் அகில இந்திய உதவித் தலைவர் தோழர்கள் A. சுகுமாரன், G. நடராஜன் அகில இந்திய துணை பொதுச்செயலாளர்  தோழர் K. முத்தியாலு,   அகில இந்திய பொருளாளர் தோழர் T.S. விட்டோபன் , தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் R.வெங்கடாஜலம், தமிழ்மாநில உதவிச் செயலாளர் தோழர் S. சுந்தர கிருஷ்ணன், தமிழ் மாநில பொருளாளர் தோழர்  S. காளிதாசன், சென்னை தொலைபேசி மாநில  செயலாளர் தோழர் S. தங்கராஜ் , M. கண்ணப்பன்  சென்னை தொலைபேசி மாநில பொருளாளர், A.S  வைத்தியநாதன் வில்லிவாக்கம் செயலர் ,சென்னை தந்தி மாவட்ட செயலாளர் தோழர் A.சுந்தர், SAMYUKTHA KISAN MORCHA தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் K..பாலகிருஷ்ணன்( நமது உறுப்பினர்) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ் மாநிலச் செயலர் தோழர் ஆர்வி பேசும் பொழுது சென்னை தந்தி மாவட்ட செயல்பாடுகளை வெகுவாக பாராட்டினார். இன்றைய தினம் தந்தி மாவட்ட மாநாடு நடத்தியதைப் போல் மற்ற மாவட்ட  மாநாடுகளும் நடைபெற வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்.

தோ.V ராமராவ் ஏற்புரையில் நாம் ஒவ்வொருவரும் இந்த சமுதாயத்திற்கு திருப்பி அளிக்கும் வகையில் இயன்ற உதவிகள் செய்ய வேண்டும் என்று கூறினார்.  தோழர் DG  இன் உரைக்குப் பிறகு தமிழ் மாநிலச் செயலர் தோழர் RV  தலைமையில் நடைபெற்ற தேர்தலில்  புதிதாக பதவியேற்ற தோழர்களுக்கு மாநில சங்கத்தின் சார்பில் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்  தெரிவித்தார்.



No comments:

Post a Comment