Friday 26 July 2019

25-07-2019 அன்று சென்னையில் மத்திய சங்க செயலக கூட்டம் நடைபெற்றது. மத்திய சங்க தலைவர் தோழர் ராமன்குட்டி , பொதுசெயலர் தோழர் கங்காதர ராவ் , பொருளாளர் தோழர் விட்டோபன், துணை தலைவர்கள் தோழர் கோபாலகிருஷ்ணன் , நடராஜன் ,  சுகுமாரன் , துணைப்பொதுசெயலர்கள் தோழர் முத்தியாலு மற்றும் தோழர் வரப்பிரசாத் , உதவி பொது செயலர் தோழியர் ரத்னா , உதவி பொருளாளர் தோழர் ராமராவ் , தமிழ் மாநில செயலர் தோழர் வெங்கடாச்சலம் , சென்னை மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர் .
 அதுபோழ்து நம் ஓய்வூதியர் பிரச்சினைகள் தீவிரமாக விவாதிக்கப்பட்டன . நம்முடைய பிரதான கோரிக்கையான மத்திய ஏழாவது சம்பள குழு  பரிந்துரைகளின் அடிப்படையில்  ஓய்வூதிய மாற்றம் அடைந்திட எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன . 
அந்த விபரங்கள் விரைவில் மத்திய சங்க அறிக்கை மூலம் வெளி வரும்.

1 comment:

  1. சென்னை மத்திய செயற்குழு அறிக்கை.ஆம். 'சென்னை அறிக்கை'இதைவிட ஓர் செயல் திட்ட அறிக்கையை தயாரித்தல் என்பது இயலாத காரியம்.இந்த கூட்டு முயற்சிக்கு நாம் தலை வணங்கி வரவேற்ப்போம்.செயல் படுத்திட அனைவரும் ஒன்று படுவோம். Now or Never என்றே எடுத்துக்கொள்வோம். நன்றி.nnr.tnj.

    ReplyDelete