Sunday 14 July 2019


    புதுச்சேரி மாதாந்திர 
 பொதுக்குழு 
கூட்டம்
புதுச்சேரி மாதாந்திர பொதுக்குழு கூட்டம், 13.07.19 உதவித் தலைவர் M.V.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 70 பேர் கலந்து கொண்டனர். NFTE சங்க வளாகத்தில் நடத்தவிருந்த கூட்டத்திற்கு EU சங்க உதவி தலைவர் தடைக்கோரி நிர்வாகத்திடம் கோரி மீறி நடந்தால் கலாட்டா செய்வோம் எனக் கூறியதை கண்டித்து அங்கேயே கூட்டம் நடந்தி அவர்களை சந்திப்போம் என தயாரானோம். அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க மாநிலச் செயலரின் ஆலோசனை பெற்று வேறு இடத்தில் நடத்த முடிவு செய்து அருகிலுள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் கூட்டம் நடைபெற்றது.


நிர்வாகத்தின் பாரபட்ச போக்கினை கண்டித்தும், EU சங்க தொழிலாளர் விரோத, தொழிற்சங்க விரோத போக்கினை கண்டித்தும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 3 மாத சங்க செயல்பாட்டறிக்கையை செயலர் சமர்பித்தார். பின் பென்சன் மாற்றம் குறித்து துறை அமைச்சரை நமது தலைவர்கள் சந்தித்து பேசியதை செயலர் அன்பழகன் விரிவாக பேசினார் . புதிய உறுப்பினர்கள் கெளரவிக்கப்பட்டனர். தோழர்கள் பட்டாபி, கிருஷ்ணசாமி, . முனுசாமி, அசோக் ராஜன் , ஏசு, ரவனையா, யேசுதாஸ் பேட்ரிக், வைத்திலிங்கன் ஆகியோர் கருத்து ஆலோசனைகளை வழங்கினர். பொருளாளர் லோகநாதன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment