Monday 22 July 2019


மயிலாடுதுறையில் 12வது மாதாந்திரக்கூட்டம் 21.07.2019 அன்று தோழர் சண்முகவேல் அவர்கள் தலமையில் மிகச் சிறப்பாக  நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக   தோழர்கள்  பிரான்சிஸ் சேவியர், மா.அ.செ, சாமிநாதன் தஞ்சை மா.செ, ஜெயராமன் மா.அ.செ கலந்து கொண்டு இன்றைய புதிய சூழலைப்பற்றியும், நமது தலைவர்கள் எடுத்துக்கொண்டிருக்கிற நடவடிக்கை பற்றியும் சிறப்புரை ஆற்றினார்கள்.  அதுசமயம் அகவை 70ஐ கடந்த மூத்த தோழர்கள் சந்தானகோபாலகருஷ்ணன், வீரமணி, கோவிந்தராஜூ,கலியமூர்த்தி, முத்துக்கருப்பன், கல்யாணசுந்தரம், பாலசுப்பிரமணியன் மற்றும் தோழியர் கமலா கிளையின் சார்பாக கைத்தறி ஆடை அணிவித்து கெளரவிக்கப்பட்டார்கள். சிறப்பு அழைப்பாளர்களையும் கைத்தறிஆடை அணிவித்து கெளரவித்தார்கள். FTTH தொழில்நுட்பத்திற்கு OLTகருவி வாங்குவதற்காக தனது ஒரு மாத பென்சன் தொகையை வழங்கிய தோழர் சாமுநாதன் தஞ்சை மா.செ குடந்தை NFPTE தலைவர்தோழர் பாலு அவர்கள் கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டிப் பேசினார். மயிலாடுதுறையில் கடைகள் அடைத்திருந்தும் தோழர்கள் மதிய உணவை சிறப்பாக  ஏற்பாடு செய்திருந்தார்கள். கூட்ட  தோழர்கள் செந்திலாதிபன்,சண்முகவேல் செய்திருந்தார்கள். மயிலைத்தோழர்,தோழியர்களை மாவட்டச்சங்கம் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 
R.ஜெயராமன்,
மா.அ. செயலாளர்,
AIBSNLPWA,
கும்பகோணம்


No comments:

Post a Comment