Wednesday 12 June 2019

நமது சங்கத் தலைவர்கள் மத்திய அமைச்சருடன் பேச்சு வார்த்தை
    
MTNL & BSNL  பென்சனர் சங்க கூட்டமைப்பு (CBMPA) தலைவர்கள் M - K. பக்சி, S.S. நந்தாகிசன் சிங் ஆகியோர் 11.06.2019 அன்று மத்திய கனரக தொழிற் மற்றும் பொதுத்துறை  நிறுவன அமைச்சர்  மாண்புமிகு அரவிந் கன்பத் சவந்த் அவர்களை சந்தித்தனர்.அமைச்சர் பொறுப்பேற்றதற்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர். BSNL, MTNL -ல்பென்சன் மாற்றம் குறித்து அவரிடம் விவாதித்து இக்கோரிக்கை மீது தீர்வு காண தனதுஉதவியை நல்கிட கோரினர்.பென்சன் மாற்றம் குறித்து பென்சன் மற்றும் பென்சனர்நலத்துறைஅனுப்பிய கேள்வி மற்றும் ஆலோசனைகளுக்கு DOT - பதில் தரதயங்குவதை எடுத்துக் காட்டினர்அவற்றை பரிவுடன் கேட்ட அமைச்சர் இது விசயமாகதான்  தலையிட்டு உதவி செய்வதாக உறுதியளித்தார்.மேலும் இது சம்பந்தமாக,தேவைப்பட்டால் தொலை தொடர்பு அமைச்சரிடம் பேசுவதாகவும் கூறினார்மேலும்அவர் கூறுகையில் BSNL & MTNL -ல்  நிலவும் சூழ்நிலைகளைக்கு ஒரு தீர்வு காணவும்அரசு மிகுந்த கவனத்தை செலுத்த உள்ளது என்றார்.
BSNL / MTNL - பென்சனர்களுக்காக தன் கதவு எப்போதும் திறந்திருக்கும் என்ற மனம்நிறைந்த பேச்சோடு கூட்டம் முடிந்தது.
மத்திய சங்க செய்தி தமிழாக்கம்அன்பழகன்மாவட்டச் செயலர்புதுச்சேரி )

No comments:

Post a Comment