Wednesday 29 August 2018

AIBSNLPWA Formation Day 
Celebration in 
DHARMAPURI  
தருமபுரியில்  28-08-2018 அன்று AIBSNLPWA-ன் அமைப்பு தின  சிறப்பு கூட்டம்  கொடியேற்றத்துடன் தொடங்கியது.சங்கக் கொடியை மூத்த தோழர் V. ராமமூர்த்திராவ் சாதனை முழக்கங்களுக்கிடையே  ஏற்றினார். 11-00 மணியளவில் மாவட்டத்தலைவர்  தோழர் முனியன் தலைமையில் கவுரவத்தலைவர் தோழர் வி.சுந்தரம், கிருஷ்ணகிரி கிளைச்செயலாளர் தோழர் கே.தங்கவேலு, தருமபுரி கிளைச்செயலாளர் தோழர் அசோகன், ஒசூர் கிளைச்செயலாளர் தோழர் சத்தியேந்திரன் முன்னிலை வகிக்க கூட்டம் துவங்கியது.
 மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர் முனுசாமி அஞ்சலி உரையாற்றினார். மாவட்டச்செயலாளர் தோழர் சுப்ரமணியம் அனைவரையும் வரவேற்று உரை யாற்றினார். BSNLEU மாவட்டச்செயலாளர் தோழர் P. கிருஷ்ணன், FNTO மாவட்டச்செயலாளர் தோழர் V.பைரராஜன், TEPU மாவட்டச்செயலாளர் தோழர் A.அம்மாசி, PEWAமாவட்டச்செயலாளர் தோழர் M.பிரபாகரன், NFTE  மாவட்டச்செயலாளர் தோழர் K. மணி,சேலம் கிழக்கு மாவட்டத்தலைவர் தோழர் ரங்கன், மாவட்டச்செயலாளர் தோழர்   P.ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னிலை வகித்த தோழர்கள் மற்றும் மாவட்டத்துணைச் செயலாளர் தோழர் G.தங்கபாண்டியன் ஆகியோர் சங்க செயல்பாடுகளை எடுத்துரைத்தனர்.
மாநிலத்துணைச்செயலாளர் தனது சிறப்புரையில் சங்க சாதனைகளை விளக்கியதோடு  உறுப்பினராக இல்லாத அனைத்து ஓய்வூதியர்களையும் உறுப்பினராக்க வலியுறுத்தினார். மாநிலத் துணைத்தலைவர் தோழர் T.வேடியப்பன் தனது சிறப்புரையில் ஓய்வூதியர்களின் ஒற்றுமை குறித்தும், 7-சம்பளக்குழு பரிந்துரைத்த அடிப்படையில் ஓய்வூதியம் மாற்றி அமைக்கக் கோரி சங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.  
மாநிலத்துணைச்செயலர் தோழர் V.பட்டாபிராமன் கலந்து கொண்டு  சிறப்புரையாற்றினர்.  
மாவட்டப் பொருளாளர் தோழர் P.வணங்காமுடி நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.கூட்டத்தில் 55 க்கு மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். மதிய உணவு வழங்கப்பட்டது.       
--சுப்ரமணியம்/மாவட்டச்செயலாளர்.







No comments:

Post a Comment