Sunday 10 November 2019


அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நல சங்கத்தின் தஞ்சை மாதாந்திர பொதுக்கூட்ட நிகழ்வுகளின் தொகுப்பு.
9 11 2019 இரண்டாம் சனிக்கிழமை தஞ்சை மாவட்ட அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர பொதுக்கூட்டம் காலை பத்து முப்பது மணிக்கு தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் இனிதாக ஆரம்பமாகி நடைபெற்றது. 150க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.மாவட்ட தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்க மாவட்ட கௌரவ தலைவர்  தோழர் ஏகே தனபாலன் மாவட்ட செயல் தலைவர் தோழர் பிரின்ஸ் மற்றும் தோழர் பிரான்சிஸ் சேவியர் மாநில அமைப்புச் செயலர் முன்னிலையில் தோழர் வீ. சாமிநாதன் மாவட்ட செயலர் முன்னின்று நிகழ்வுகளை நடத்தினார். முதலில் தோழர் தேவராஜ் கடவுள் வாழ்த்து இசைத்திட தோழர் கே. அய்யனார் இணை செயலர் வரவேற்புரை நிகழ்த்தினார். சென்ற மாத கூட்டத்திலிருந்து இன்று நடைபெற்ற கூட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் இயற்கை எய்திய 5 தோழர்கள் பி பாலு சுவாமி டி எம் திருத்துறைப்பூண்டி தோழர் வி கணேசன் டிஎம் கந்தர்வகோட்டை தியாகராஜன் டிஎம் திருவாரூர் தோழர் எஸ் கலியமூர்த்தி  லைன் இன்ஸ்பெக்டர் மன்னை தோழர் என். ரவிச்சந்திரன் டிஎம் பேராவூரணி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் முகத்தான் இரண்டு நிமிடம் அனைத்து உறுப்பினர்களும் மௌனம் காத்து பிறகு அவர்கள் பணியினை நினைவுகூர்ந்து இதயபூர்வமான அஞ்சலி செலுத்தப்பட்டது. அடுத்து கௌரவத் தலைவர் செயல் தலைவர் மாநில அமைப்புச் செயலர் மாவட்ட செயலர் மற்றும் முன்னணி தோழர்கள் எம். இருதயராஜ் கே. சந்தானகோபாலன் என் .நடராஜன் முன்னணி தோழியர் மல்லிகா சுகுமாரன் ஆர். உஷா போன்றோர் உரை நிகழ்த்தினார்கள். அனைத்து உரை நிகழ்த்தியவர்களும் தற்பொழுது நம்முடைய பிஎஸ்என்எல் நிறுவனத்தின் நிலையையும் நமது சங்கத்தின் தற்போது நாம் ஆற்ற வேண்டிய முக்கிய பொறுப்பினை பற்றியும் லைப் சர்டிபிகேட் மற்றும் வாடகையில்லா தொலைபேசி சர்டிபிகேட் சமர்ப்பிப்பதின் முக்கியத்துவத்தையும் தற்போதைய நிலையில் நாம் மிகவும் ஒற்றுமையுடனும் மன உறுதியுடனும் எவ்வாறு சங்க பணிகள் ஆற்ற வேண்டும் மற்றும் சங்கத்திற்கு  சந்தா தொகையினை தவறாமல் காலத்தில் செலுத்த வேண்டியதின் அவசியத்தைப் பற்றியும் தங்களது உரையில் பதிவு செய்தனர். வழக்கம்போல் சென்ற மாதம் ஓய்வு ஏற்று இன்றைய கூட்டத்தில் மூன்று தோழர்கள் தங்களது மணிவிழா வினையும் இந்த மாதம் பிறந்தநாள் அமையப்பெற்ற வருத்தப்படாத வாலிப வாலிபிகளின் பிறந்தநாள் விழாவும் சந்தன மாலை அணிவிக்கப்பட்டு கேக்கு வெட்டப்பட்டு அனைத்து உறுப்பினர்களின் வாழ்த்து கோஷங்களுடன் இனிதே கொண்டாடினர். பொருளாளர் தோழர் கே. சீனு நன்றி உரை ஆற்றிட , தஞ்சை சுவைமிகு மதிய விருந்துடன் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
வாழ்க, வளர்க அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கம்.


No comments:

Post a Comment