Thursday 28 March 2019

சென்னை CCA அலுவலகத்தில் ஜாயிண்ட் CCA அதிகாரியாக பணி புரிந்து வந்த திரு நா .மோகன் அவர்கள் இம்மாத இறுதியில் பணி ஒய்வு பெறுகிறார். நாம் கொண்டு சென்ற பல ஓய்வூதியர் பிரச்சினைகளை மிகவும் சாதகமாக முடித்துக் கொடுத்துள்ளார். பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் அணுகி தீர்த்து வைத்து எல்லோர் பாராட்டையும் பெற்ற அதிகாரி. அவருக்கு நம் சங்கத்தின் சார்பாக நன்றி பாராட்டி வாழ்த்து வழங்க அகில இந்திய துணைத்தலைவர் தோழர் D கோபாலகிருஷ்ணன் , அகில இந்திய துணைப் பொதுசசெயலர் தோழர் கே .முத்தியாலு , தமிழ் மாநில தலைவர் தோழர் வி.ராமராவ் , தமிழ் மாநில செயலர் தோழர் ஆர்.வெங்கடாசலம் , சென்னை STR கோட்ட செயலர் தோழர் எஸ்.சுந்தரகிருஷ்ணன் ஆகியோர் அவர் அறைக்கு வந்தனர் . 
அப்போது CCA  திரு சித்தரஞ்சன் பிரதான் அவர்களும் அங்கு வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். Dy . CCA  திரு சங்கர பாண்டி அவர்களும் உடனிருந்தார் .  தோழர் DG சால்வை அணிவிக்க மற்ற தலைவர்கள் நம் சங்க பெயர் பொறிக்கப்பட்ட  கடிகாரத்தை அன்பு பரிசாக அளித்தார்கள். நன்றியுடன் பெற்றுக்கொண்ட அந்த அதிகாரி நம் சங்கத் தலைவர்களின் அணுகு முறையினை வெகுவாக பாராட்டி தன் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்தார் .   




No comments:

Post a Comment