இன்று தஞ்சை மாவட்ட அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் கூட்டம் காலை 10 மணிக்கு தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொதுவாக IDA, MRS , பென்ஷன் ரிவிஷன் மற்றும் சென்ற மாதம் நடைபெற்ற உலக மகளிர் தினம் இன்னும் எவ்வாறு குறித்த நேரத்தில் சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பன பற்றிய தங்களது கருத்துக்களை விளக்கி கூறவும் இறுதியில் அது சம்பந்தமாக நல்லதொரு முடிவும் எட்டப்பட்டது.
Friday 15 April 2022
தோழர் எஸ் புருஷோத்தமன் வாழ்க வளமுடன் பேராசிரியர் சிறந்ததொரு சொற்பொழிவு ஆற்றி மாவட்ட செயலர் வி சாமிநாதன் அவர்களின் 80வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு வாழ்க வளமுடன் இயக்கத்தை சேர்ந்த ஒரு சிறந்த நூலினை பரிசாக அளித்து கௌரவித்தார். இன்றைய மதிய உணவிற்கான செலவினை இன்று பிறந்தநாள் கொண்டாடிய தோழர் விஜயகுமார் ரிட்டயர்டு டீஜிஎம் தானே முன்வந்து ஏற்றுக் கொண்டதற்கு சங்கத்தின் சார்பாக நன்றியினை தெரிவிக்கிறோம். நிறைவாக கே.சீனூ பொருளாளர் நன்றி நவில கூட்டம் நிறைவு பெற்றது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment