Friday 17 December 2021

 

AIBSNLPWA THANJAI DISTRICT.
இன்றைய ஓய்வூதியர் தின கூட்டத்தின் தொகுப்பு.
அனைவருக்கும் வணக்கம். இன்று தஞ்சை BSNL  ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டத்துடன் ஓய்வு ஊதியர்கள் தின சிறப்பு நிகழ்ச்சியும் சேர்ந்து கொண்டாடப்பட்டது. இன்று காலை 10.30  மணிக்கு துவங்கிய கூட்டம் பகல் 2 மணி அளவில்  நிறைவு பெற்றது
தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட தோழர்களும் தோழியர்களும அவர்தம் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தலைவர் தோழர் மதுரை ராஜேந்திரன் தலைமை ஏற்றிட மாவட்ட செயலர் கூட்டத்தினை கௌரவத் தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடத்தினார். முதலில் சங்க கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் எம் இருதயராஜ் துணைத் தலைவர் கொடியினை அனைவரது வீர வணக்கத்துடன் மற்றும் கோஷங்களுடன் ஏற்றி வைத்தார்தோழியர் சாரதா சந்தான கோபாலன் கடவுள் வாழ்த்து இசைத்திட கூட்டத்தின் தலைவர் முன்னுரை ஆற்றினார். பிறகு தோழர் பன்னீர்செல்வம் வரவேற்புரை ஆற்ற தொடர்ந்து சென்ற ஒன்றரை வருடங்களாக நடைபெறாத மணி விழா காட்சிகள் மற்றும் பிறந்தநாள் விழா காட்சிகள் நடந்தேறின. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மணிவிழா காட்சிகளும் பத்துக்கு மேற்பட்ட பிறந்த தின காட்சிகளும் நடைபெற்றது.
பிறகு ஓய்வு தின நிகழ்வுகள் ஆரம்பமாகின. தலைவர் முன்னுரைக்கு பின் தோழியர் லைலா பானு அவர்கள் இந்த ஒன்றரை வருட காலத்தில் இயற்கை எய்திய அனைத்து உறுப்பினர்கள் மற்றும் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் இயற்கை எய்திய அனைத்து ராணுவ அதிகாரிகளுக்கும் மற்றும் இயற்கை எய்திய அனைத்து வகை உறுப்பினர்களுக்கும்  ஒரு நிமிட  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  அடுத்து தோழர் கே.சந்தானகோபாலன் துணைத் தலைவர் நமது ஓய்வூதியர்கள் தின முக்கியத்துவத்தையும் காரண காரியங்களையும் பிறகு ஏற்பட்ட நல்ல சாதனைகளையும் இனி வருங்காலத்தில் நமது சங்கம் செயலாற்ற வேண்டிய சாதனைகள் பற்றியும் விரிவாக உரை நிகழ்த்தினார்மாநில துணைப் பொருளாளர் வாழ்த்து செய்தி நல்கினார்மாநில அமைப்புச் செயலாளர் தனது வாழ்த்துரையில் ஓய்வு ஊதியர் தின முக்கியத்துவம் பற்றியும் நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் உரை நிகழ்த்தினார். அடுத்து மாவட்ட செயலர் ஓய்வூதியர் தின முழு வரலாற்றையும் அன்றைய காலந்தொட்டு இன்றைய காலம் வரையில் உள்ள நிகழ்வுகளை மிக அழகாக தனது உரையில் விளக்கி உரையாற்றி நிறைவு செய்தார். 2022 ஜனவரி முதல் மாதாந்திர கூட்டம் வழக்கம்போல் நடைபெறும் என அறிவித்தார்.
முடிவில் மாவட்ட பொருளாளர் நன்றி உரை நவில மதிய தஞ்சை பாரம்பரிய உணவு பரிமாறிய பிறகு கூட்டம் இனிதே நிறைவேறியது.
வாழ்க ஓய்வூதியர் நல சங்கம், வளர்க அவர்களது பணி நன்றி, வணக்கம்.
V. சுவாமிநாதன் ,
மாவட்ட செயலர்
AIBSNLPWA ,
தஞ்சாவூர் மாவட்டம்







 

No comments:

Post a Comment