Sunday 19 December 2021

 




சேலம் கிழக்கு மாவட்ட மாநாடு
சிறப்பான மாநாடு!
6 வது சேலம் கிழக்கு மாவட்ட மாநாடு பென்ஷனர் தினத்தையும் இணைத்து மாவட்ட தலைவர் தோழர் ரங்கன் தலைமையில் 17.12.2021 அன்று நடை பெற்றது. 30க்கும் மேற்பட்ட தோழியர்கள் உட்பட 220 பேர் பங்கு கொண்டனர்.
மாநாட்டில் 70,75,80,85 வயது நிறைந்த 49 தோழர்கள், சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் பொருளாளர் தோழர் கண்ணப்பன், தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் ஆர்வீ இணைந்து சால்வை அணிவித்து கௌரவிக்க பட்டனர். மாவட்ட செயலாளர் தோழர் ராமலிங்கம் செயல் பாட்டு அறிக்கையை மிக சிறந்த முறையில் தொகுத்து அவைக்கு சமர்ப்பித்தார். மத்திய, மாநில, மாவட்ட சங்கங்கள் எடுத்து தீர்த்து வைத்த பிரச்சனைகளை பட்டியல் இட்டத்துடன், பென்ஷன் Anomaly வழக்கில் நாம் பெற்ற வெற்றி, பென்ஷன் ரிவிசன் வழக்கு பற்றிய விவரங்களை கோர்வையாக தொடுத்து இருந்தார். சுருக்கமாக சொல்ல போனால், ஒரு ஆவனமாக வைத்து கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருந்தது. அதே போல் மாவட்ட சங்க வரவு, செலவு அறிக்கை யும் பொருளாளர் தோழர் மோகன் சிறந்த முறையில் தயாரித்து அளித்தார். இரண்டும் மாநாட்டில் ஒப்புதல் பெற பட்டது.
மாநாட்டை வாழ்த்தி தர்மபுரி மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் முறையே தோழர்கள் முனியன், சுப்பிரமணியன், வணங்காமுடி  ஆகியோர் உரையாற்றி னர். சேலம் NFTE மாவட்ட செயலாளர் தோழர் பாலகுமாரின் சிறப்பானதொரு உரை அனைவரின் பாராட்டை பெற்றது. அகில இந்திய அளவிலும், மாநிலத்திலும் நமது உறு ப்பினர் எண்ணி க்கயை குறிப்பிட்டு இன்றைக்கு இவ்வளவு பெரிய அமைப்பு வேறு எங்கும் இல்லை என்றும், திறமையும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட தலைவர்களை கொண்டுள்ள இயக்கம் என்று புகழ்ந்து உறைத்தார். சென்னை தொலை பேசி மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் CGHS, FMA, பென்ஷன் Anomoly வழக்கில் மூத்த தோழர்கள் அடைந்த பலன் ஆகியவற்றை விளக்கி பேசினார்.
இறுதியில் முடிவுரையாக பேசிய மாநில செயலாளர் மாவட்டத்தின் மூத்த தோழரும், அனைவராலும் மதிக்க படுகின்ற தோழர் PKB, மற்றும் மாவட்ட சங்கதின் வேண்டுகோளை ஏற்று மாநில மாநாட்டை கிழக்கு மாவட்டம் சேலத்தில் நடத்தலாம் என்ற மாநில சங்கத்தின் ஏக மனதான முடிவை மாநில தலைவர் தோழர் ராமாராவ் ஒப்புதலோடு அறிவிப்பதாக அவைக்கு தெரிவித்த போது அனைவரும் பலத்த கர ஒலியோடு வரவேற்றனர்.
மாவட்ட சங்கத்தின்
கௌரவ தலைவராக தோழர் P.K. பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவராக தோழர் K. P. ராஜ மாணிக்கம்,
மாவட்ட செயலராக தோழர் M. கணேசன்,
மாவட்டபொருளாளராக தோழர் P.ராமலிங்கம் ஆகியோரை உள்ளடக்கிய மாவட்ட பொறுப்பாளர்கள் ஒரு மனதாக தேர்வு செய்ய பட்டனர்.
புதிய நிர்வாகிகள் அனைவரையும் மாநில சங்கத்தின் சார்பில் மாநில செயலாளர் வாழ்த்தி அவர்கள் பணி சிறக்க தமிழ் மாநில சங்கம் துணை நிற்கும் என்று உறுதி அளித்தார். மாவட்ட செயலாளர் பொறுப்பேற்ற தோழர் கணேசன் நன்றிநவில மாநாடு நிறை உற்றதாக மாநாட்டை தலைமை ஏற்று நடத்திய தோழர் ரங்கன் அறிவித்தார்.










No comments:

Post a Comment