Friday 10 January 2020

அன்புமிகு தோழர்களே,
தமிழ் மாநில தொலைத்தொடர்பு வட்டத்தில் வரலாற்று சாதனை படைக்கிறது  மதுரை மாவட்டத்தின் வத்தலகுண்டு பகுதி. ஆம் இன்று 09-01-2020 மாலை 3-00 மணி அளவில் வத்தலகுண்டு பகுதியில் விருப்ப ஒய்வு பெற்று இம்மாத இறுதியில் செல்ல விருக்கும் 30 ஊழியர்களுக்கு ஒரு வாழ்த்தி வழியனுப்பும் விழா சிறப்பாக தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. முதன்மை பொது மேலாளர் திருமதி S .E .ராஜம் அவர்கள் கலந்துகொண்டு அனைவரையும் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். 
அந்த விழாவில் நம் மதுரை மாவட்ட AIBSNLPWA  சார்பில் மாவட்ட செயலர் தோழர் தோழர் S .வீராச்சாமியும் . வத்தலகுண்டு கிளை செயலர் தோழர் V . பெரியசாமியும் கலந்து கொண்டார்கள் . மாவட்ட செயலர் விருப்ப ஓய்வில் செல்ல இருக்கும் தோழர்களை வாழ்த்தி பேசினார். BSNL க்கு அவர்கள் அளித்துள்ள சேவையினை வெகுவாக பாராட்டினார். நம் சங்கம் செய்துள்ள சாதனைகளை விரிவாக எடுத்துரைத்து இது போல் சாதனைகளை எந்த ஓய்வூதியர் சங்கமும் செய்ய வில்லை , செய்யவும் முடியாது. மிக அதிக எண்ணிக்கையுள்ள ஓய்வூதியர்களை தன்னகத்தே கொண்டுள்ள இச்சங்கம் ஏழாவது ஊதியக்குழுவின்  பரிந்துரைகளை நாமும் பெற்றிட அயராது பாடுபட்டு வருகிறது. இதில் நீங்கள் எல்லோரும் இணைய வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்தார் அதன் விளைவாக அனைத்து 30 தோழர்களும் நம் சங்கத்தில் இணைய விரும்பி , படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். விருப்ப ஓய்வில் செல்லும் தோழர்கள் நூறு சதவீதம் நம் சங்கத்தில் சேர்வது ஒரு இமாலய சாதனையாகும். அடுத்து 13ஆம் தேதி பழனி பகுதி அலுவலகத்தில் மாலை 3-00 மணிக்கு வாழ்த்தி வழியனுப்பும் விழா நடை பெற உள்ளது.
தோழமை வாழ்த்துக்களுடன் 
S .வீராச்சாமி ,
மாவட்ட செயலர்.


No comments:

Post a Comment