Tuesday 28 January 2020

27-01-2020 அன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர் கிளையில் , ஜெயங்கொண்டம், அரியலூர் பகுதிகளில் உள்ள VRS ல் செல்லும் தோழர்களுக்கு ஹோட்டல் லயா -இன்  குளிர்பதன அரங்கில் மிக அற்புதமான பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. AIBSNLPWA சங்கத்தின் தமிழ் மாநில தலைவர் தோழர் V.ராமராவ் , தமிழ் மாநில செயலர் தோழர் R .வெங்கடாசலம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
நிகழ்ச்சிக்கு முன்பாக தொலைபேசி நிலைய வளாகத்தில் நம் சங்க கொடியை மாநில செயலர் ஏற்றி வைத்தார் அங்கு நிறுவப்பட்ட நம் சங்க கல்வெட்டினை மாநில தலைவர் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே திறந்து வைத்தார். சுவைமிகு மதிய உணவிற்குப் பின் 2-00 மணிக்கு நிகழ்ச்சி கோலாகலமாக துவங்கப்பட்டது.
இந்த கூட்டத்தின் அரிய நிகழ்வு என்னவென்றால் , VRS ல் செல்லும் 20 தோழர்கள் தங்கள் இல்லத்தரசிகளுடனும் மற்ற குடும்ப உறவுகளுடன் குதூகலத்துடன் கலந்து கொண்டதுதான். இந்த செயல்களை மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மிகவும் பாராட்டி பேசினார்கள் .
நம் திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பில் மாவட்ட தலைவர் தோழர் V.P. காத்தபெருமாள் , மாவட்ட செயலர் தோழர் T .செல்வராஜ் , மற்றும் மாவட்ட செயலர் தோழர் R .சுதர்சனன் ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள் .
தங்கள் சங்கத்தில் இருக்கும் VRS ல் செல்லவிருக்கும் தோழர்களை AIBSNLPWA  வில் இணையும்படி அறிவுறுத்தி ,
அவர்களை வாழ்த்தி வழியனுப்பி  NFTE BSNL  சங்க மாநில செயலர் தோழர் நடராஜன் , மாவட்ட செயலர் S பழனியப்பன் , ஜெயங்கொண்டம் கிளை செயலர் தோழர் G. .செல்வராஜ் ஆகியோர் பேசினார்கள் .
VRS ல் செல்லும் தோழர்கள் சால்வை போர்த்தி, நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள் .
அரியலூரில் JTO  மற்றும் SDE  ஆக  பணிபுரிந்து ஒய்வு பெற்ற தோழர் V..துரைராஜ் அவர்கள் தம்முடன் பல்லாண்டு காலம் பணிபுரிந்த தோழர்கள் VRS ல் செல்வதை அறிந்து , அவர்கள் அளித்து வந்த சேவையினை பாராட்டும் முகத்தான் அனைவருக்கும் சுவர் கடிகாரம் அளித்து பாராட்டி பேசினார்.
ஒய்வு பெறும் தோழர்களின் வாரிசுகள் சிலர் மேடையில் தங்கள் தந்தையை போற்றி, பாராட்டி பேசியது நெஞ்சை நெகிழ செய்தது. கிளை பொருளாளர் தோழர் ஷேக் தாவுத் நன்றி கூற விழா பிரியா விடை பெற்றது.













No comments:

Post a Comment