Saturday 16 December 2023

 

பிஎஸ்என்எல்   ஓய்வூதியர் தின விழா 
 16.12.2023  அன்று தூத்துக்குடியில் அகில இந்திய  பிஎஸ்என்எல்  ஓய்வூதியர்  தின விழா நடைபெற்றது.  நிகழ்ச்சியில் முதலாக  தேசியக் கொடியை திருமதி .தி. சரஸ்வதி  ஏகாம்பரநாதன் ஏற்றி வைத்தார்.   சங்க கொடியை அகில இந்திய துணைத் தலைவர் திரு. முத்தியாலு அவர்கள்  ஏற்றினார்.  மாவட்டத் தலைவர் திரு தாமஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.  திரு சொர்ண ராஜ் இணைச் செயலர்  வரவேற்புரை ஆற்றினார்.  திரு பால்சாமி பொருளாளர் துவக்க உரை ஆற்றினார்.
 வாழ்த்துரையில் திரு எஸ் பாலசுப்பிரமணியன் திரு சோமசுந்தரம் பேசினார்கள்.  மாவட்டச் செயலர் திரு சுப்பையா மாவட்ட செயல்பாடு பற்றி பேசினார்.  சிறப்பு உரையில் திரு நா. அம்பிகாபதி மாநில உதவி செயலர், பென்ஷன்  ரிவிஷனில் நீதிமன்ற தீர்ப்பு பற்றி விளக்கமாக கூறினார்.  திரு முத்தியாலு அகில இந்திய துணைத் தலைவர்,  பென்ஷன் முக்கியத்துவம் பற்றியும்,  நடப்பில்  நீதிமன்ற தீர்ப்பின் நிலவரம் பற்றியும் விளக்கமாக பேசினார்.   திரு உதயசூரியன் நன்றி கூறினார்.  கூட்டத்தில் சுமார் 120 உறுப்பினர்களுக்கு மேல் கலந்து கொண்டனர்.











No comments:

Post a Comment