Sunday 5 March 2023


 

பென்ஷன் அதாலத்.

தமிழ்நாடுஅதாலத் கூட்டம்  மதுரையில் உள்ள North Gate அரங்கில் 03-03-2023 காலை 10-00 மணி அளவில் திரு சித்தரஞ்சன் பிரதான்  CCA தமிழ்நாடு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதில் Smt. கவுதமி பாலஸ்ரீ Jt .CCAதிருவாளர்கள்  சஞ்சித்குமார் Jt. CCA , A G. மணி  Dy CCA . மற்றும் AO , AAO , Sr .Acct   என 15 பேர்கள் கலந்து கொண்டனர் .

ஓய்வூதியர்கள் , மற்றும் சங்கங்கள் சார்பாக 75 பேர்கள் கலந்து கொண்டனர் நமது சங்கத்தின் சார்பாக தோழர்கள் V. சாமிநாதன்,R .வெங்கடாசலம் , P .ஜெயராமன் AGS S .சுந்தரகிருஷ்ணன் CS,R .அசோகன் CDL,S .வீராச்சாமி MDU, K .மாரி KKD, S .சுப்பையா TT N.S . தீனதயாளன் STR , K .அய்யனார் TNJ, சீனிவாசன் TNJ, வெற்றி CDL, சீனிவாசகன் MDU ஆகியோர் கலந்து கொண்டனர்.

திரு மணி Dy.CCA அனைவரையும் வரவேற்றார் . மதுரை மாவட்ட AIBSNLPWA சார்பாக CCA , Jt.CCA , Dy.CCA ஆகியோருக்கு சால்வைகள் அணிவிக்கப்பட்டன .

Smt .கெளதமி அவர்கள் பேசுகையில்  கொரோனா காலத்திற்குப் பிறகு நேர்முகமாக நடைபெறும் முதல் அதாலத் இது  என்றும், இனிமேல் 3 மாதத்திற்கு ஒரு முறை பென்ஷன் அதாலத் நடைபெறும் என்று கூறினார். 250க்கும் மேற்பட்ட குறை படிவங்கள் (Grievances) வந்தது. அதில் 81 மட்டும் முறையாக தேர்வு செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது  என்றார் .

திரு மணி Dy .CCA பேசும்போது சில குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன , சில குறைகளுக்கு BSNL,வங்கி மற்றும் அஞ்சலகம் சார்பில் விபரங்கள் தேவைப்பட்டதால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன .அவர்களிடமிருந்து பதில் வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த அதாலத் அமைதியான முறையில் நடைபெறஒத்துழைப்பினை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார் .

திரு சித்தரஞ்சன் பிரதான் , CCA  அவர்கள்  அவர்கள் தமது உரையில் இம்மாதம் கடைசி நாளில் பென்ஷன் போடுவதில் வங்கிப் பிரச்சினைகள் காரணமாக மதியம் தான் வங்கி கணக்கில் போடப்பட்டது. இதற்கு காரணம் CCA அலுவலகம் அல்ல. நாம் 24ஆம் தேதி அன்றே பென்ஷன் பண பரிமாற்றத்தை வங்கியில் செலுத்தி வருகிறோம். SBI யின் HUB ஹைதராபாத்- ல் உள்ளது. அவர்கள் முதலில் மத்திய அரசு பணியாளர்கள் சம்பளம், பிறகு மாநில அரசு பணியாளர்கள் சம்பளம்அதன்  பிறகு மூன்றாவதாக ஓய்வூதியம் என்று அனுப்புகிறார்கள். இதனால் தாமதம் ஏற்பட்டு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தன. இனிமேல் ஏப்ரல்  முதல் ஓய்வூதியர்களுக்கு முதல் priority கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளோம்.

2. ஏறத்தாழ 30,000 SAMPANN ஓய்வூதியர்கள் CCA தமிழ்நாட்டில் உள்ளனர். இதில் 20,000 பேர்கள் BANK Migration மூலம் வந்தவர்கள் வங்கிக் கணக்கில் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்கள் SAMPANN க்கு மாற்றப்பட்டுள்ளன. இதில் சில மொபைல் எண்கள் தவறாக உள்ளன .ஓய்வூதியர்கள் வேண்டுகோளுக்கு ஏற்ப மொபைல் நம்பர் சரி செய்யப்படும்.

3. வருகிற  ஜூன் மாதம் அதாலத் கூட்டம் கோவையிலும், செப்டம்பர் மாதத்தில் சேலத்திலும் நடத்தி முடிக்க திட்டம் உள்ளது என்று கூறினார்

விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 81 குறைகளில் , 50 குறைகள் நம் சங்கத்தின் மூலம் கொடுக்கப்பட்டது. பிரச்சினைகளையும் , தீர்வுகளையும் DY. CCA விளக்கி உரைத்தார்.

5 ஓய்வூதியர்களுக்கு தீர்வு காணப்பட்ட கடிதத்தின் நகல்கள் அளிக்கப்பட்டன.

இறுதியில் சங்கப் பிரதிநிதிகளையும் , வந்திருந்தவர்களையும்  பேச அழைத்தனர். நமது சங்கத்தை சார்ந்த அனைத்து தோழர்களும் பேசினார்கள்.

1) LCகாலம் தாழ்த்தி கொடுப்பதால் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை . ஒரே ஒரு supplement பில் மட்டும் போடுகிறார்கள். பென்ஷன் நிலுவை போடப்படுவதில்லை  இதனால் 2 தவணைகளாக 10 மற்றும் 20 தேதிகளில் விடுபட்ட பென்சனர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்.   இந்த கோரிக்கையினை CCA ஏற்றுக்கொள்ள வில்லை.

2)     Smt மருதாம்பாள் திருச்சி அவர்களுக்கு நவம்பர் மாதம் குடும்ப ஓய்வூதியம் sanction செய்தும் இதுநாள் வரை பென்ஷன் போடவில்லை

3)  4 வருட காலமாக கிடப்பில் உள்ள Smt .மெர்சி , குன்னுர் அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்பட வேண்டும்.

 LPD கேஸ் குறைகள் கொடுத்தும் அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை .அதற்கு CCA ," பிடித்தம் " செய்தது சரியே என்று DOT நிர்வாகம் ஒத்துக்கொண்டுள்ளது " இதற்கான பதிலை ஏற்கனவே அதாலத்தில் கூறி விட்டோம் , Extra Increment  CAT சென்னை ஓய்வூதியர் சார்பாக தீர்ப்பு வழங்கி உள்ளது. நிர்வாகம் 06-01-2023 அன்று மெட்றாஸ் High கோர்ட் ல் அப்பீல் செய்துள்ளது ஓய்வூதியர் சங்கமும் Cavid Petition file செய்துள்ளது எனவே விவாதிக்க முடியாது  ."என்றார் .

4.  கர்நாடகா CCA, DLC சம்பந்தப்பட்ட குறைகளை தீர்க்க ஒரு வாட்சப் எண் கொடுத்துள்ளார். அதைப்போல தமிழ்நாட்டிலும் செய்யலாம் என்று கூறினோம்.CCA அலுவலக தொலைபேசியில் பதில் கிடைப்பதில்லை. e-mail க்கும் பதில் கிடைப்பதில்லை  சிலருக்கு ஆதார் எண் தவறாக உள்ளது  அதை சரி செய்ய வேண்டும் அதாலத்தில் தீர்க்கப்படாத குறைகளை விரைவில் தீர்க்க வேண்டும் என்ற பல்வேறு முக்கிய பிரச்சினைகளை நம் சங்கத்தை சார்ந்தவர்கள் பேசினார்கள்.

5) Co-authorisation of FP சம்பந்தப்பட்ட ஒரு குறைபாட்டில் விவாதித்தபோது ," Not able to earn income " என்ற சான்றிதழ் தேவை என்று குறிப்பிட்டார்கள். Not fit for employment என்ற வாசகத்தில் மருத்துவ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதுவும் அதே விளக்கத்தைத்தான் கொடுக்கிறது என்று நாம் குறிப்பிட்டோம். அதற்கு CCA அவர்கள் " Any statement or  sentence   .which gives implied meaning wont be considered "என்று பதில் அளித்தார் .அதனால் Not able to earn என்ற வாசகத்தோடு மருத்துவ சான்றிதழ் வாங்க வேண்டும்.

அதாலத்தின் இறுதி நிகழ்வாக , AO பென்ஷன் அவர்கள்  நன்றி கூற , மதியம் 1-00 மணிக்கு அதாலத் நிறைவடைந்தது. அனைவருக்கும் snacks மற்றும் தேனீர் வழங்கப்பட்டது






No comments:

Post a Comment