Thursday 29 December 2022

19-12-2022 திங்கட்கிழமை தஞ்சை மேரிஸ் கார்னரில் அமைந்துள்ள  உள்ள நமது சங்க அலுவலக வளாகத்தில்   அகில இந்திய BSNL  ஓய்வூதியர்கள் மத்திய நலச்சங்கத்தின் அறைகூவல் படி  காலை 10 மணிக்கு தஞ்சை குடந்தை மாவட்ட சங்கங்கள் இணைந்து M. இராஜேந்திரன் மாவட்ட தலைவர் தஞ்சை மற்றும் அனந்தன் குடந்தை மாவட்ட சங்க ஆலோசகர் கூட்டுத்தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வீ. சாமிநாதன் மாநிலத் தலைவர்  சங்க கொடியேற்றினார்.   300 க்கும் மேற்பட்ட தோழர்கள் தோழியர்கள்  பெருந்திரளாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  தோழர் அய்யனார்  திருவாரூர் தோழர் நடராசன்  ஏழாவது சம்பளக்குழு  பரிந்துரை படி BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் வழங்கிட வலியுறுத்தி  ஆர்பாட்டத்தில் முழக்கங்கள்  எழுப்ப கூடியிருந்தோர் வீர கோஷங்களுடன் முடக்கமிட,
தொடர்ந்து ஓய்வூதியர் தின சிறப்பு கூட்டத்தை  மாநில உதவி செயலர்
N. வீரபாண்டியன் துவக்கிவைத்தார்.   மணிவிழா பிறந்தநாள் விழாவை தொடர்ந்து
.அய்யனார் வரவேற்புரை ஆற்றினார்‌. கிளைச்செயலர்கள் AMF ஜெயசீலன் பட்டுக்கோட்டை  முகமது யாசின் மன்னை ராஜாஜி திருவாரூர்  மற்றும்  இராஜேந்திரன் சிவசங்கரன் பட்டுக்கோட்டை   N B 2, லைலாபானு , குடந்தை ஜெயராமன் மாநில உதவி செயலர்          ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிறைவாக வீ சாமிநாதன் மாவட்ட செயலர் ஓய்வூதியர் தின சிறப்பு  உரை ஆற்றி நன்றியும் கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது . வழக்கம் போல் தஞ்சை அறுசுவை மதிய உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
தோழமையுடன்
வீ .சாமிநாதன்
மாவட்ட செயலர், 
 தஞ்சை.









No comments:

Post a Comment