Monday 27 June 2022

 

Tenkasi Branch  General Body Meeting.

AIBSNLPWA தென்காசி கிளையின்5 -வதுஆண்டுவிழா

25 -6 -22  அன்று  தென்காசி- மேலகரம்  திரிகூட ராசப்ப கவிராயர்திருமண மண்டபத்தில்சிறப்பாக நடைபெற்றது. சங்க துணைத்தலைவர் தோழர் A .அஹமத் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது .70-கும்மேற்பட்ட தோழர் தோழியர்கள் திரளாக கலந்துகொண்டார்கள் .கடவுள் வாழ்த்து  தோழர் துரைராஜ் அவர்கள் பாடினார் . தலைவர் முன்னுரைக்குப்பின் கடந்த இரண்டரை வருடங்களில் இறந்த நம் தோழர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேறற்றப்பட்டது. இரண்டு நிமிட  மௌன அஞ்சலிக்குப்பிறகு  நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

கிளை செயலாளர்  S .செல்லப்பா வரவேற்புரை நிகழ்த்தி, தென்காசி கிளையின் செயற்பாடுகள் கடந்த கொரோனா காலத்தில் எவ்வாறு நடைப்பெற்றது என்பதையும்,நமது மாநில சங்கம் ,மத்திய சங்கம் எவ்வாறு செயல்பட்டு நமது ஓய்வூதியர்கள் நலன்களுக்காக செயல்பட்டு வெற்றிகரமான செயல்களை செய்தார்கள் என்பதை யும் விளக்கி கூறினார். மேலும் தென்காசி கிளையின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பதையும் விளக்கி கூறினார் .சங்க பொருளாளர்  N.வேலாயுதம் அவர்கள் 2019  ஆண்டு முதல் 31 -03 -2022  முடிய,  சங்க வரவு செலவு கணக்கினை சமர்ப்பித்தார் . அனைத்து உறுப்பினர் தோழர்களும் கை தட்டி  ஒப்புதல் கொடுத்தார்கள். பின்னர் செயலாளர்.S. செல்லப்பா அவர்கள் புதிய /பழைய  தீர்மானங்களை  முன் மொழிந்தார். அவைகள் அனைத்தும்  ஏகமனதாக  நிறைவேற்றப்பட்டது .மேலும் இந்த விழாவில் சங்க மூத்த தோழர் /அதிகாரி  V .கணபதி சுப்ரமணியன்  அவர்கள்  80  வயது நிறைவடைந்ததை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் . அவரது கடந்தகால நிர்வாக திறமைகளையும் சேவைகளையும்  தோழர்கள் செல்லப்பா, வேலாயுதம் ,கணேசன்,கிட்டு  ஆகியோர் பாராட்டி பேசினார்கள். கணபதி சுப்ரமணியன் அவர்கள் ஏற்புரை வழங்கினார் . சிறப்பு விருந்தை நமதுV. கணபதி சுப்ரமணியன்  அவர்கள்   ஏற்பாடுகள் செய்திருந்தார் . புதிய நிர்வாகிகள் தேர்வு தோழர் V.கணேசன் அவர்கள் நடத்தினார். கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்கள் .

1..தலைவர்--------A .அஹ்மத் அலி

2 .செயலாளர்-----S .செல்லப்பா

3 .பொருளாளர்---R .சங்கர்

நன்றி உரைக்குப்பின் தேசியகீதம் பாடப்பட்டு கூட்டம் இனிதே முடிந்தது.






No comments:

Post a Comment