Wednesday 1 April 2020


அனைத்து 
மாநில சங்க நிர்வாகிகள்
மாவட்ட செயலர்கள் 
கவனத்திற்கு 
அருமை தோழர்களே
வணக்கம்.
நமது சென்ற மாநில செயற்குழு தூத்துக்குடியில் 2019, செப்டம்பர் 29, 30 தேதிகளில் நடைபெற்று 6 மாதம் நிறை வடைந்த நிலையில், அடுத்த மாநில செயற்குழு நடத்த வேண்டும்.
மாநில சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று கடலூர் மாவட்ட சங்கம் ஒப்புக்கொண்டு இம்மாத இறுதியில் நடத்துவதற்கு இடத்தையும் நிச்சயித்து மாவட்ட செயலாளர் தோழர் அசோகன் தெரிவித்தார்.
கொரானா (COVID 19)நோயின் தீவிரம் காரணமாக இம்மாதம் 14 ஆம் தேதி வரை நாடுமுழுவதும் ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த நோயின் தாக்கம் மிக அதிகமான பாதிப்பை 60 வயதுக்கு மேல் உள்ளோர்க்கு ஏற்படுத்தும் என்பதால் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளது. அதை ஓய்வூதியர்களாகிய நாம் ஏற்று கொண்டு கட்டுப்பாட்டுடன் இருந்து வருகிறோம்.  ஆகவே  நாம் அனைவரும்
நலமுடன் உள்ளோம்.
எனவே நமது மாநில செயற்குழுவை நிலைமை சீராகி நாடு கொரானா பாதிப்பில் இருந்து விடுபட்டது என்ற அரசின் அறிவிப்பு வந்த பிறகு நடத்துவதே சரியாக இருக்கும் என்பதை நீங்கள் அனைவரும் ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கை யோடு ஒத்துழைப்பு நல்க கேட்டு கொள்கிறோம்.
வாழ்த்துக்களுடன்,
தோழமை உள்ள,
V. ராமராவ்
மாநில தலைவர்
R. வெங்கடாச்சலம்
மாநில செயலாளர்
01.04.2020

No comments:

Post a Comment