Saturday 19 August 2017

விருதுநகர் மாவட்டத்தைச்சார்ந்த தோழர் அப்துல் லத்தீப் அவர்கள் இன்று காலை 0800 மணியளவில் மறைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த துக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.அன்னாரது இறுதி சடங்குகள் இன்று இரவு 0800 மணிக்கு விருதுநகர் அவர் இல்லத்தில் வைத்து நடைபெறும். அவர் ஆன்மா அமைதியுற ஆண்டவரை வேண்டுகிறோம்.
.
தோழர் அப்துல் லத்தீப் அவர்கள் நம் சங்கம் விருதுநகர் மாவட்டத்தில் அமைய முக்கிய காரணமாக இருந்தவர். ஒரு முறை மாநில அமைப்பு செயலராகவும், ஒருமுறை விருதுநகர் மாவட்ட செயலாளராகவும், பிறகு மாவட்ட தலைவராகவும் அரும் பணியாற்றியவர். தற்சமயம் மாவட்ட பொருளாளராக உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த மாநில செயற்குழு சிறப்பாக ,வெற்றிகரமாக நடைபெற மிகவும் அரும்பாடு பட்டு ஆர்வத்துடன் மிக்க ஈடுபாட்டுடன் பணியாற்றினார். அவரின் விருந்தோம்பல் அக்கறை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அமைதி , அடக்கம், காரியமாற்றும் திறன் போன்றவை அவர் அணிகலங்கள் .
அன்னாரை இழந்து வாட்டும் அவர் குடும்பத்தாருக்கும் , விருதுநகர் சங்க தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர் மகள் கைப்பேசி எண் :96009 41978




1 comment:

  1. I know him since 1979. When I worked as JE O/D Virudhunagar he was working as TO. When he was given duty in TD(Test Desk) morning 7 AM itself he rang up our residential phone and intimate me the no. of pending faults and ordering of LM to attend the fault. Normally we will call him as Vappa. Lastly I met him at Virudhunagar on 20/04/2017. My heart felt condolence to his family members.Let his soul rest in peace.

    K Selvarajan Retd., DGM TN Circle chennai

    ReplyDelete