Sunday 14 May 2017



                புதுச்சேரி மாதாந்திரக் கூட்டம் 
 13-05-2017
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மாதாந்திர பொதுக்குழு கூட்டம் நடப்பதுபோல இம்மாதமும் 13-05-2017 அன்று கூட்டம் நடந்தது. 65 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தோழர் M.V. ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலர் தனது உரையில், இம்மாதத்தில்  ஆயுள் சந்தா உறுப்பினர் அடையாள அட்டை பதிவுசெய்த உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட்து., 
        MRS அட்டையில் மாற்றம் இருப்பின் மாற்றம் கோரலாம்,
        நமது சங்கம் கோரிப்பெற்ற மருத்துவ அலவன்சு,,
        புதுவையில் ஹெல்மெட் 01-015-2017 முதல் அணிய உத்தரவை
        நினைவுபடுத்தியது.
       அதாலத்திற்கு 78.2 நிலுவை கிடைக்காதவர் விபரம் போன்ற 
       விபரங்களை SMS மூலம் நினைவுபடுத்தப்பட்டது. 
      மருத்துவ பில்கள் பட்டுவாடா பற்றி அறிய சென்னை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் பெறப்பட்டது..   2006 வரை நிலுவையில் உள்ள 78.2 பட்டுவாடா பற்றியும், 33-வருட குறைவு சேவைக்கு முழுபென்சன் கிடைக்காதவர் பட்டியலையும் மாநிலச்செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
        உடல்நலக்குறைவு ஏற்பட்ட தோழியர் திருமதி, கெளரி அவர்களின் கணவர், சென்னையில் STROKE-ஆல் பாதிக்கப்ப்ட்டு உள்ள மூத்த தோழர். பிச்சுமணி, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தோழர்.A.சாமிநாதன், TM(Rtd), புதுவையில் FNTO—வை வழிநடத்தி சென்ற மூத்த தோழர். குருஜி என்று அழைக்கப்படும் கனகசொரூபன் கடலூர் மருத்துவமனையில் உள்ளவரையும் நமது சங்க தோழர்களுடன் சென்று உடல்நலம் விசாரித்தோம். சனவரியில் மரணமடைந்த தோழர்.காசிராஜன்,SDE(Rtd) அவர்களின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் ஏப்ரலில் கிடைக்கச்செய்ததை கூறினார். 
         ஏப்ரல்-2017 மாதத்திலிருந்து ஒரு புதிய நடைமுறையை செயலர் அன்பழகன் அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது உறுப்பினரின் பிறந்த தேதியன்று காலையில் அவருக்கு சங்க சார்பாக பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் முறையை கடைப்பிடித்து ஏப்ரல் மாதத்தில் 20 தோழர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மகிழ்ச்சியடைந்தனர் அவர்கள்.  இம்மாதமும் அது தொடர்கிறது. 
          இதுவரையில் இல்லாத ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.  மே தினத்தன்று நமது சங்கக் கொடியை பலத்த கோஷங்களுடனும்,  சங்க அறிவிப்பு பலகையை திறந்துவைத்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. 
         கூட்டத்தில் கடந்த மாதம் திரு K.  குணசெகரன், முகமது நாசர், திருமதி. பாலாமணி-பிரபாகரன்,  கற்பகம்-ரமணன், B.மாலா, R.ராஜேஸ்வரி w/o S.N.ராஜேந்திரன்,DGM(F), குருநாதன், TM(Rtd) ஆகிய ஏழு பேரும் ஆயுள்சந்தா  உறுப்பினர்களாக இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.  இவர்களைச் சேர்த்து தற்போது  ஆயுள்சந்தா  உறுப்பினர் சேர்ப்பு  177 ஆனது ( அதிகாரிகள்:36, STS/SSS: 56, TM: 58, Family Pensioner: 27 )  ஆண்டுசந்தா    உறுப்பினர்  இல்லை.  
          78.2% IDA இணைப்பிற்கான உத்தரவு மற்றும் அதற்கான பட்டுவாடா கிடைக்காமல் காலந்தாழ்த்துவதை பற்றி உறுப்பினர்கள் அதிருப்தியை தெரிவித்தனர். தற்போதுள்ள நிலைப் பற்றி செயலர் கூறினார். நல நிதி ஒன்றை உருவாக்க முடிவெடுக்கப்பட்டது. 78.2 நிலுவையை பெற்ற திரு. பட்டாபி, செங்கழனி, நாராயணசாமி, சத்யநாராயணன், இயேசு, K.J..ஜாய், சீனிவாசன், நகுலன். ஆகியோர் நன்கொடை வழங்கினர். உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மாநில உதவி பொருளாளர் சதாசிவம் உரையாற்றினார்.  தமிழ்மாநில NFTE-ன் மாநிலத் தலைவர் திரு.P..காமராஜ் வாழ்த்துறை வழங்கினார். 
          14-05-2017 அன்னையினர் தினத்தையொட்டி வந்துள்ளவர்களுக்கு  மாவட்ட உதவிச் செயலர் வைத்திலிங்கன் இனிப்புகள் வழங்கினார். பொருளாளர் லோகநாதன் நன்றி கூறினார். 
AIBSNLPWA ZINDABAD !!!
 



No comments:

Post a Comment