Saturday 11 February 2023

 

ன்று 11.02.2023 இரண்டாம் சனிக்கிழமை தஞ்சை மாவட்ட ஓய்வூதியர்கள் நல சங்கத்தின் மாதாந்திர கலந்துரையாடல் பொதுக்கூட்டம் காலை  10 மணிக்கு தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி வளாகத்தில் மாவட்ட தலைவர் தோழியர் எஸ். சந்திரகுமாரி,  தலைமையில் மாநில தலைவர் தோழர் வீ. சாமிநாதன் முன்னிலையில் துவங்கியது.

தோழியர் சத்யா புவனேஸ்வரன் கடவுள் வாழ்த்து இசைத்து அடுத்து தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடி ஆரம்பித்து வைக்க, தோழர் டி சுப்பிரமணியன் இணை செயலர் வரவேற்புரை ஆற்றினார். பிறகு தோழர்கள் எம் இருதயராஜ் செயல் தலைவர் கே தனபாலன் கௌரவ தலைவர் பி பாஸ்கரன் பிஎஸ் மூர்த்தி டி பக்கிரிசாமி டி டி பி கிளை செயலாளர் தோழியர் லைலா பானு பி சண்முகம் துணைச் செயலாளர் தோழர் நெடுஞ்செழியன் மாவட்ட முதன்மை ஆலோசகர் கே. சந்தான கோபாலன் ஆகியோர் உரையாற்றினார்கள். அவர்கள் தங்களது உரையின் மையக் கருத்தாக மாவட்ட மாநில மத்திய சங்க இன்றைய நிகழ்வுகள் FMA இன்கம் டேக்ஸ் சாம்பன் பென்ஷன் மற்றும் மாவட்ட மாநில மத்திய சங்க செய்திகள் பற்றி தெளிவாக தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.  குறிப்பாக ஓய்வூதிய மாற்றம் சீனியர் சிட்டிசன் ரயில்வே சலுகைகள் பற்றிய தங்கள் கருத்துக்களை விவரமாக பதிவு செய்தனர்.

மாவட்ட செயலர் . அய்யனார் தனது விரிவான உரையில் இன்றைய மாவட்ட சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் இதுவரை தீர்த்து வைத்த பிரச்சனைகள் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் மற்றும் மாவட்ட சங்கத்திற்கு அளிக்க வேண்டிய சந்தா பற்றி மிகவும் தெளிவாக உரையாற்றினார்.  இந்த மாதம் பிறந்த தினம் அமையப்பெற்ற தோழர் தோழியருக்கு கேக் வெட்டப்பட்டு வாழ்த்து கோஷங்களுடன் இனிதாக பிறந்தநாள் நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது. தோழர் இளங்கோவன்- மாநிலத் தலைவர், மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு மனமுவந்து தனது சொந்த செலவில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தோழர் தனது துணைவியாருடன் வந்திருந்து பிறந்த நாளை கொண்டாடி சங்க தலைவர்களை கௌரவித்தது சிறப்பான நிகழ்வாக அமைந்தது.

மாநில தலைவர் எல்லோருடைய சந்தேகங்களையும் தீர்த்து வைத்து சென்ற மாதம் நடைபெற்ற மாவட்ட மாநாட்டின் தீர்மானங்களை ஒரு மனதாக அனைத்து உறுப்பினர்களின் கரகோஷத்தோடு நிறைவேற்றினார்.

அண்மையில் துருக்கி சிரியா நாடுகளில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் இரண்டு நிமிடம் மௌனம் காத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக தோழர் பி எஸ் மூர்த்தி மாவட்ட அமைப்பு செயலாளர் நன்றி உரையாற்ற கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

இன்றைய சிறப்பு அம்சமாக இது காறும் ஒரு ஆண் தலைமை பொறுப்பேற்று தஞ்சை மாவட்ட கூட்டங்களை நடத்தி வந்த காட்சிகள் முதல் முறையாக ஒரு ஒரு மகளிர் அணியைச் சார்ந்த தோழியர் எஸ் சந்திரகுமாரி மாவட்ட தலைவர் சிறப்பாக தலைமையேற்று கூட்டத்தினை வெகு விமர்சையாக நடத்தினார். அவருக்கு உறுப்பினர்கள் அனைவரது வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகுக. வழக்கம்போல் மதிய தஞ்சை இன் சுவை விருந்து சிறப்பாக வந்திருந்த 130 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு கூட்டம் சிறப்பாக நிறைவுற்றது.

கூட்ட நிகழ்வுகளின் தொகுப்பு :
கே சந்தான கோபாலன்
ஆலோசகர்,
தஞ்சாவூர்.

No comments:

Post a Comment