Friday 18 September 2020

 

தோழர் ராமையன், STR, நாகப்பட்டிணம்  அவர்களின் மனைவிக்கு வரவேண்டிய குடும்ப ஓய்வூதியம் SBI வங்கியில் கடந்த 4 மாதங்களாக போடப்படாமல் இருந்தது. அதை நமது மாநில செயலரிடம் சொல்லி அதை நிவர்த்தி செய்ய கேட்டுக்கொண்டோம். அவரின் முயற்சியால் இந்த மாதம் அந்த தோழியருக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

2. Late A.Lilly, KARAIKKAL அவர்களின் கணவருக்கு வரவேண்டிய குடும்ப ஒய்வூதியம் ஜூன் மாதத்திலிருந்து குறைத்து வழங்கியது IOB , வங்கி நிர்வாகம். பிரச்சனை நமது கவனத்திற்கு வந்தது. அவருக்கு குடும்ப ஓய்தியம் 10 வருடங்களுக்கு உண்டு. வங்கி நிர்வாகம் 7 வருடம் முடிந்த உடனேயே ஓய்வூதியத்தை குறைத்து விட்டது. அதை நமது மாநில செயலரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம்.அவரின் அறிவுறுத்தலின் பேரில் வங்கிக்கு (CPPC) மெயில் அனுப்பினோம். இன்று அந்த தோழரின் குடும்ப ஓய்வூதியம் சரி செய்யப்பட்டு அரியர்ஸ் வழங்கியது வங்கி நிர்வாகம். இந்த கரோனா காலத்திலும் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த தோழர்களின் துயர் துடைத்த மாநில செயலருக்கும், வங்கி நிர்வாகத்திற்கும் குடந்தை மாவட்டச்சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

 நாகை தோழர் ஜேம்ஸ் செல்வராஜ் அவர்களின் மனைவி விக்டோரியா அவர்களுக்கு கிடைக்கவேண்டிய குடும்ப ஓய்வூதியத்திற்காக முயற்சிகள் எடுத்த மாநில செயலர் அவர்களுக்கும், தோழர். தீனதயாளன், மா..செயலர் அவர்களுக்கும் குடந்தை மாவட்டச் சங்கம் தனது தன்றியைத் தெரிவித்திக்கொள்கிறது.

தோழர் B.Sathish, OS, KMB அவர்கள் 30.04.2020 அன்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு PPO (HPO-வில் பென்சன் பெறுவதற்கு) 3 மாதமாக வரவில்லை என்று நம்மிடம் சொன்னார். அவரின் பிரச்சனையை கடந்த வாரம் மாநில செயலரின் கவனத்திற்கு கொண்டு சென்று PPO விரைவில் கிடைப்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டோம்அவரும் (இந்த கொரோனா காலத்திலும்) எடுத்த முயற்சியினால் இன்று தோழருடைய PPO HPO, குடந்தைக்கு இன்று வந்துள்ளது.  PPO காலத்தே கிடைக்க உதவி செய்த மாநில செயலாளர் தோழர் R.V அவர்களுக்கு குடந்தை மாவட்டச் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

 நாகை தோழர். late கந்தசாமி அவரகளின் மனைவிக்கு ஜனவரி'20 முதல் குடும்ப ஓயவூதியம் கிடைக்காமல் இருந்தது. பிரச்னை நமது கவனத்திற்கு நாகை தோழர். வேலுசாமி மூலம் வந்தது. நாம் வங்கியுடன் தொடர்பு கொண்டதோடு மட்டுமல்லாமல் மாநில செயலரின் கவனத்துக்குக் கொண்டு சென்றதன் காரணமாக இன்று அந்த தோழியருக்கு கிட்டத்தட்ட 1.5 லட்சம் அவருடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவிய மாநில செயலர், மற்றும் தீனதயாளன், மா..செ அவர்களுக்கும் குடந்தை மாவட்டச் சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஜெயராமன்.R
மா..செயலாளர்,
AIBSNLPWA,
கும்பகோணம்.


 


No comments:

Post a Comment