Thursday 4 October 2018

விருதுநகர் மாவட்ட ஆறாவது மாநாடு லட்சுமி திருமண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தேசியக்கொடி மற்றும் சங்கக்கொடி விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றிவைத்த பிறகு மாவட்ட தலைவர் M .சண்முகம் அவர்கள் தலைமையில் துவங்கியது.
AIBSNLPWA சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் தோழர் DG அவர்கள், அகில இந்திய துணைசெயலர் தோழர் S . அருணாச்சலம் , தமிழ் மாநில செயலாளர் தோழர் .R . வெங்கடாச்சலம்  (R.V ), மதுரை மாவட்ட செயலர் தோழர் வீராச்சாமி மற்றும் மாவட்ட ஊழியர் சங்க செயலாளர்கள் கலந்து கொண்டு பேருரை ஆற்றினார்கள் .
கூட்டத்தில் தோழர் M .சண்முகம்  அவர்கள் மாவட்ட தலைவராகவும், தோழர் S . சண்முக  கனி அவர்கள் மாவட்ட செயலாளர் ஆகவும் , தோழர் T .K . பாண்டி அவர்கள் மாவட்ட பொருளாளராகவும் ஒரு மனதாக பலத்த கரகோஷங்களுக்கிடையே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்து  கொண்ட இந்த மாவட்ட கூட்டம் முடிவடைந்த பின் அனைவருக்கும் சுவைமிகு உணவு அளிக்கப்பட்டது. மாநாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் ....



No comments:

Post a Comment