Thursday 27 April 2017

தோழர்களே / தோழியர்களே 
அனைவருக்கும் வணக்கம்.
நம் சங்க செயல்பாடுகள் ஒவ்வொருவர் வாழ்விலும் பிண்ணி பிணைந்திருக்குகிறது என்று கூறினால் அதனை மறுப்பவர் எவரும் உளரோ என்று இயம்பும் அளவிற்கு நம் சங்கத்தின் பெருமை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கிறது. இதற்கு உதாரணமாக நம் புதுச்சேரி எடுத்துக்கொள்ளலாம் 

ஒய்வு பெற்ற STS தோழர் A  செங்கழனி அவர்கள் நம் சங்கத்தின் முத்த  தோழர். எல்லா கூட்டத்திற்கும் தவறாமல் வந்திருந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து சிறப்பிக்கும் பண்பாளர். ஒரு நாள் மாவட்ட செயலர் தோழர் அன்பழகனுடன் பேசும் போது , தன் வறுமை நிலைமை காரணமாக கைக்கெடிகாரம் கட்ட இயலவில்லை என்று கூறியுள்ளதை செயலர் மனதில் கொண்டு இன்று தோழர் செங்கழனி அவர்களுக்கு தோழர் ஜானகி ராமன் (SDE ஒய்வு), தோழர் சுந்தரம் ( AGM ஒய்வு), தோழர் ஜனக ராஜன் ( SDE ஒய்வு), தோழியர் கல்யாணி ( மாவட்ட அமைப்பு செயலர்) மற்றும் தோழர் நந்தன் ( AIBSNLPWA உறுப்பினர் ) ஆகியோர் முன்னிலையில்  ஒரு கைக்கடிகாரத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

இத்துடன் அவர் நிற்கவில்லை. பாண்டிச்சேரியில் மே மாதம் முதல் தேதியிலிருந்த்து இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாய மாகிறது. ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டால் ரூ ஆயிரம் அபராதம் உண்டு. நம் சங்க உறுப்பினர்கள் யார் யாரிடம் இரு சக்கர வாகனம் உள்ளது என்கிற விபரங்களை சேகரித்து அவர்களுக்கு sms மூலமாகவும் whatsapp மூலமாகவும் செய்திகள் அனுப்பியும் , போனில் பேசியும் நேரில் காணும்போது அறிவுறுத்தியும் வருகிறார்.
வாழ்க அவர் தொண்டு. வளர்க அவர் தொண்டுள்ளம்.

No comments:

Post a Comment