Tuesday 15 November 2016


தஞ்சாவூர் மாவட்ட ஓய்வூதியர் நலச்சங்க மாதாந்திர கூட்டம் 13-11-2016 அன்று காலை 1030 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 100 உறுப்பினர்களுக்கு மேல் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தில் பிறந்த தேதி வரும் உறுப்பினர்களுக்காக  பிறந்த நாள் கேக் வெட்டி வாழ்த்தொலியோடு கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கூட்டத்தில் எல்லா விஷயங்களும் பேசப்பட்டன. செயலாளர் தோழர் சுவாமிநாதன் , தங்கையன்  மற்றும் பலர் பெங்களூரு சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு ,அமைச்சருக்கு நினைவு பரிசு நல்கி உடனடியாக தஞ்சாவூர் திரும்பிவந்து கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியது மிகவும் போற்றத்தக்கது.  பிறந்தநாள் கொண்டாடும் தோழர்களிடம் நன்கொடை எதுவும் வசூலிப்பதில்லை அவர்களாக கொடுத்தால் ஏற்றுக்கொள்வதாக செயலர் தெரிவிக்கிறார் கூட்ட முடிவில் வடை பாயாசத்துடன் தஞ்சைக்கே உரித்தான பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது. ஒற்றுமையுடன் சங்கப்பணியாற்றும் தஞ்சை தோழர்களையும்  தனிப்பட்ட முறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு கலந்து கொண்டு புகைப்படங்களை அனுப்பிவைக்கும்  தோழர் சந்தானகோபாலனை பாராட்டுகிறோம்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.....

கடலூர் மாவட்ட நம் தோழர்கள் விழுப்புரம்,சிதம்பரம்,திண்டிவனம் ஆகிய ஊர்களில் மாதா மாதம்  பகுதி கூட்டம் நடத்தி வருகிறார்கள் .
இம்மாதம் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் பகுதியில் நடைபெற்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெங்களூரு சிறப்பு மாநாடு நடக்கிற தேதியில் திண்டிவனம் கூட்டம் நடைபெற தேதி குறிக்கப்பட்டது. ஆனால் பிறகு அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் பகுதி மாதாந்திரக்கூட்டம் நடத்துவதற்கு இதுகாரும் இலவசமாக இடம் கொடுத்து உதவும் தோழர் A.ஜெயகுமார் அவர்களின் நண்பருக்கு உளமார நன்றி தெரிவிக்கப்பட்டது.
கூட்ட அரங்கிற்காக பிளாஸ்டிக் நாற்காலிகள் நன்கொடை அளித்த தோழர்கள் தட்சினாமூர்த்தி,பாலகிருஷ்ணன்,அவர்களுக்கும்,ரூ5000 நாற்காளிகள் வாங்க நன்கொடை வழங்கிய சுசிலா கருணாநிதி அவர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு இனிப்புடன் கூடிய சிற்றுண்டி,மதிய உணவளித்த திருமதி பொன்னம்மாள் கன்னையனுக்கு அனைத்து ஓய்வூதியர்களும் பலத்த கரவொலிக்கிடையே பாராட்டுக்களையும்,வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
ஒவ்வொரு மாதமும் நடக்கும் இந்த கூட்டத்திற்கு உணவு செலவுகளை ஒவ்வொரு தோழர்கள் தாங்களாகவே முன்வந்து அளித்து மகிழ்வதை மாவட்ட சங்கம் பாராட்டுகின்றது.

விழுப்புரம் பகுதி கூட்ட விபரம் 
வரும் டிசம்பர் 14 அன்று விழுப்புரம் பகுதி நானாம் ஆண்டு விழா நடத்த இருப்பதையும், விழாவிற்கு தோழர் சுகுமாரன் STR  டிவிஷன் தலைவர் மற்றும் தமிழ் மாநில உதவித்தலைவரை சிறப்பு பேச்சாளராக அழைக்க இருப்பதையும் தோழர் வீரமணி  விழுப்புரம்  பகுதி செயலர் கூறினார்.
மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் S.செல்வரசுமேரி,P.கலிவரதன் விழா மண்டப வாடகையை தங்கள் சார்பில் எடுத்துக்கொள்வதாக அறிவித்தனர்.
தோழர் ராஜபத்மனாபன் விழாவிற்கு வரும் சிறப்பு உறுப்பினர்களுக்கான பொன்னாடை முழுச் செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார்.
தோழர்கள் அரிக்கிருஷ்ணன் ஆண்டு விழா தேநீர் செலவை  ஏற்றுக்கொள்வதாகவும்,
நன்கொடையாக அண்ணாமலை ரூ 3000,வீராசாமி ரூ1000-யும் அளித்தனர்.

நம் சங்கத்திற்கு ஈடு இணை எங்கும் உண்டோ?

No comments:

Post a Comment